முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரைத்துறை துயரங்கள் களையப்பட தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்

புதன்கிழமை, 22 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை: நடிகர், இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார் தற்கொலைக்கு வருத்தம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ட்வீட் செய்துள்ளார்.

திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்த அசோக்குமார்  தற்கொலை செய்து கொண்டார். கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் ஒருவர் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.

"சூழ்ச்சிக்காரர்களிடம் உன்னைவிட்டுப் போகிறேன்,  மன்னித்துவிடு சசி" என்று தற்கொலை செய்துகொள்வதற்கு அசோக்குமார் உருக்கத்துடன் கடிதம் எழுதியிருக்கிறார்.அசோக்குமார் தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், "திரைத்துறை அசோக்குமார் கந்துவட்டி தொல்லையால் தற்கொலை வருத்தம் அளிக்கிறது. திரைத்துறையின் துயரங்கள் களையப்பட வேண்டும். தீர்வுகள் காண முயற்சிப்போம்" எனக் கூறியுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து