முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட்கோலியால் மட்டுமே சச்சின் சாதனையை முறியடிக்க முடியும் சோயப் அக்தர் நம்பிக்கை

வெள்ளிக்கிழமை, 24 நவம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியால் மட்டுமே ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் என்ற சாதனையை முறியடிக்க முடியும் என்று சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். 

50 சதங்கள்...
பாகிஸ்தான் அணியின் அதிவேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- நவீன காலத்தில் மிகப்பெரும் வீரராக விராட் கோலி திகழ்கிறார். ரன்களை துரத்தும் போது, விராட் கோலியை விட யாரும் சிறப்பாக விளையாடவில்லை. தற்போது விராட் கோலி 50 சதங்கள் அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி மட்டுமே முறியடிப்பார் என்று நான் நினைக்கிறேன். ஆனால், விராட் கோலிக்கு எந்த அழுத்தமும் இல்லை. விராட் கோலி தனது விளையாட்டை ரசித்து விளையாட முடியும்.

மிகப்பெரும் வீரர்
மிஸ்பா உல் ஹக்கால் 43 வயதுவரை விளையாட முடியும் என்றால் விராட் கோலியாலும் 44 வயது வரை விளையாட முடியும். சொல்லப்போனால், விராட் கோலியால் 120 சதங்களை கூட அடிக்க முடியும். இருந்தாலும், விராட் கோலியை சச்சினோடு ஒப்பிடுவது நியாயம் ஆகாது. சச்சின் டெண்டுல்கர் எல்லை காலங்களிலும் மிகப்பெரும் வீரர். தற்போதைய காலத்தில் விராட் கோலி ஜாம்பவான் வீரராக திகழ்கிறார்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து