முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்து மசூதியில் தீவிரவாத தாக்குதல்: இந்தியா கண்டனம்

சனிக்கிழமை, 25 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

புதுடெல்லி: எகிப்தின் சினாய் பகுதியில் உள்ள மசூதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 270 பேர் உயிரிழந்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள வெளியுறவுத்துறை விவகாரங்கள் அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், ''எகிப்து மசூதியில் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தீவிரவாத நடவடிக்கையில் அப்பாவி உயிர்கள் பலியானது குறித்து இந்தியா கடுமையாக தனது கண்டனத்தை முன்வைக்கிறது.

துயரமான இந்த சூழ்நிலையில், இந்திய அரசும் மக்களும் எகிப்து மக்கள் மற்றும் அரசாங்கத்தின் பின் நிற்பர்.தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக உலகளாவிய கொள்கைகளை வகுக்க இந்த சம்பவத்தை நினைவூட்டலாக எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து