முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் லதா ஆய்வு.

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      சிவகங்கை
Image Unavailable

     சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் க.லதா, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
   அதனைத் தொடர்ந்து, காளையார்கோவில் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2016-2017 திட்டத்தின் கீழ் மண்புழு உற்பத்தி நிலையத்தையும், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.124.63 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற தஞ்சாவூர்-சாயல்குடி சாலையையும் (துவரலன் கண்மாய்), தூய்மை பாரத இயக்க 2016-2017  திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பறையையும், பிரதம மந்திரி வீடு வழங்கும் 2016-2017 திட்டத்தின் கீழ் (Pஆயுலு) மானியத்துடன் வழங்கும் வீடுகளையும், அம்மா பூங்காவினையும் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
       இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.காஞ்சனா, நிர்வாகப் பொறியாளர் திருமதி.ஏழிசைசெல்வி, உதவி செயற்ப் பொறியாளர் திருமதி.ஷாஜிதாபேகம், காளையார்கோவில் வட்டார கிராம ஊராட்சி அலுவலர் அன்புத்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ரஜினிதேவி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து