முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மருத்துவ மாணவர் டெல்லியில் மர்ம மரணம்

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, டெல்லி பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யு.சி.எம்.எஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.டி பட்டப்படிப்பு படித்து வந்த திருப்பூரை சேர்ந்த மாணவர் சரத் பிரபு நேற்று மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

திருப்பூரை சேர்ந்த சரத் பிரபு என்பவர் எம். டி படித்து வந்தார். அங்கு, நேற்று காலை அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சடலத்தை பார்த்த சக மாணவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மரணத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இதற்கு முன் எய்ம்ஸ் மருத்துவமனையில் 2016-ம் ஆண்டு திருப்பூரைச் சேர்ந்த டாக்டர் சரவணனும் மர்மமான முறையில் மரணமடைந்தார். மதுரையில் எம்.பி.பி.எஸ் முடித்த பின், எய்ம்ஸ் மருத்துவமனையில், எம்.டி பொது மருத்துவ படிப்பில், சேர்ந்த அவர், தன் அறையில் இறந்து கிடந்தார். சரவணன் தற்கொலை செய்யவில்லை, திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என்ற புகார் எழுந்தது. பின்னர் அவர் விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது. இதையடுத்து, சரவணன் மரணமடைந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து