எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர், -விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக்கூட்டரங்கில் விருதுநகர் மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்றுவதற்கான அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் புதிய மற்றும் புதுப்பிக்கதக்க ஆற்றல் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் பிரவீன் குமார், மாநில அரசின் சார்பில் தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர்.சந்தோஷ் பாபு மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம், முன்னிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்தஆய்வுக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்ததாவது:-
மத்திய அரசு நிதி ஆயோக் குழுவின் அறிவுரைப்படி சுகாதராம், கல்வி, சாலைவசதி, குடிநீர் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் 115 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து அதற்கு தனி கவனம் செலுத்தி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து அந்த மாவட்டத்தை முற்றிலும் வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவது தான் இத்திட்டத்தின் நோக்கம். இந்தியாவில் 115 மாவட்டங்கள் 12 துறைகளில் பின்தங்கியாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை 2022க்குள் வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு மத்திய, மாநில அரசின் மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தை பின்தங்கிய மாவட்டமாக தேர்வு செய்தற்கு முக்கிய காரணம் ஏழ்மை, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாதது. மாவட்டத்தில் ஆண் பாலின விகிதத்தை விட பெண் பாலின விகிதம் முன்பைவிட குறைவாக உள்ளது. அதிலும் திருச்சுழி, நரிக்குடி ஆகிய பகுதிகளில் மிக குறைவாக உள்ளது. திருச்சுழி, நரிக்குடி ஆகிய பகுதிகள் மிகவும் பின்தங்கியும், இந்த பகுதிகளில் வாழும் பெரும்பான்மையான மக்கள் ஏழ்மையாக உள்ளனர். ஆரம்ப பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கணக்குபாடம் குறித்த திறமை தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தில் 3 லட்சத்து 14 ஆயிரம் நபர்கள் உறுப்பினரகளாக உள்ளனர். இது விருதுநகர் மாவட்டத்தின் மக்கள் தொகையில் 15 சதவிகிதம் ஆகும், எனவே இவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி மாற்று வேலை கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். பின்தங்கிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் குறைவாக உள்ளதாகவும், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவத்திலும் கூடுதல் கவனம் தேவைப்படகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் கல்வி, உணவு, பாதுகாப்பு ,பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, குழந்தைகள் வளர்ச்சி, நலிவடைந்த தொழில்துறை மேம்பாடு, வேலைவாய்ப்பை அதிகரித்தல், வேளாண்மை, கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் தனிகவனம் செலுத்தி அந்த துறைகளை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்வதற்கு மத்திய, மாநில அரசுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு விருதுநகர் மாவட்டத்தை மிக விரைவில் முன்னேற்றம் அடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். என்றார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தாவது:-
தமிழக முதலமைச்சர் தலைமையிலான அம்மாவின் அரசு, விருதுநகர் மாவட்டத்தை வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு மத்திய அரசுடன் இணைந்து செயல்படும். இந்திய நாட்டை காக்கின்ற பணியில் மிகப்பெரிய பொருப்பான மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இடம்பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த பெண்மணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மிகவும் பெருமைப்படதக்கதாக உள்ளது.
இராஜபாளையம் மற்றும் திருவில்லிப்புத்தூர் பகுதிகள் அதிகளவில் மலைச்சார்ந்த பகுதிகளாக உள்ளது. ஆகையால் இப்பகுதிகளில் இராணுவ பயிற்சி மையம் அல்லது இராணுவ பயிற்சிப்பள்ளி தொடங்கினால் அப்பகுதி மக்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும்;, சிவகாசியில் சுமார் 10 லட்சம் பேர் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மறைமுகமாக சுமார் 1 கோடி பேர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசுத் தொழிலாளர்களை மத்திய அரசு நினைத்தால்தான் அவர்களுக்கு நிரந்தரமாக பாதுகாப்பு வழங்க முடியும்;. டில்லியில் தடைவிதித்ததால் இங்கும் அதுபோன்ற நிலைமை ஏற்பட்டுவிடுமோ என பட்டாசுத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அச்சம் ஏற்படுகின்றது. அந்த அச்சத்தினை போக்கி அங்குள்ள மக்களுக்கு நிலையான வாழ்வாதாரம் கிடைக்கும் வகையில் வழிசெய்ய வேண்டும் என்றும், விருதுநகர் மாவட்டம் பள்ளிக்கல்வியில் தேர்ச்சி சதவிகிதத்தில் தொடர்ந்து மாநிலத்தில் முதலிடம் வகித்து வருகிறது. இருப்பினும் விருதுநகர் மாவட்டத்தில் பின்தங்கிய பகுதிகளான திருச்சூழி, நரிக்குடி ஆகிய பகுதிகளிலுள்ள மாணவர்கள் மேற்படிப்பு படிக்க வசதியாக தொழில்நுட்பக்கல்லூரிகள் அமைப்பதற்கு உதவிகள் புரிய வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் வைத்தார் என்றார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.இராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு.சந்திரபிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் இ.ஆனந்தகுமார்,மாவட்ட ஊரக வளரச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி ,மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு