முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது - கேப்டன் விராட் கோலி

வெள்ளிக்கிழமை, 2 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

டர்பன்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

அபார வெற்றி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு  இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், “ ஒரு தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெறுவது என்பது மிகவும் முக்கியமானது.
 
தொடர விரும்பினோம்
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்தை, ஒருநாள் போட்டியிலும் தொடர விரும்பினோம்.  தென் ஆப்பிரிக்க அணியை 270 ரன்களுக்குள் மடக்கி  வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.  அஜின்கியா ரகானே உயர்தர வீரர் ஆவார். தென் ஆப்பிரிக்க தொடரில் வேகப்பந்து முக்கிய பங்காற்றும் என்பதை நாங்கள் அறிந்து இருந்தோம். ரகானே, வேகப்பந்தை அருமையாக எதிர்கொண்டார்" என்றார்.

அதிருப்தியை தந்தது...
தோல்விக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளசிஸ் கூறுகையில், “ எங்கள்  அணியின் பேட்டிங் எனக்கு அதிருப்தியை தந்தது. நாங்கள் போதுமான ரன்கள் அடிக்கவில்லை. போதிய அளவு பேட்டிங்கும் செய்யவில்லை. 50 முதல் 70 ரன்கள் வரை குறைவாக அடித்துவிட்டதாக நான் எண்ணினேன். கிறிஸ் பேட்டிங்கில் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அனால், ஒட்டுமொத்தமாக பேட்டிங்கில் எங்களின் செயல்பாடு அதிருப்தி அளித்தது. விராட் மற்றும் ரகானே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து