முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயருகிறது

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதிய கமிஷன் அடிப்படையில் 2018-ம் ஆண்டு முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த ஆண்டு ஜூலை முதல் 2 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.

2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2 சதவீத அகவிலைப்படி உயர்வும், ஜூலை மாதம் முதல் ஒரு சதவீத அகவிலைப்படி உயர்வும் வழங்கப்பட்டது. இதுவரை மொத்தம் 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மேலும் 2 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியை கணக்கிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். விரைவில் மத்திய மந்திரிசபை கூடி இதற்கான முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாக உள்ளது. இனி மத்திய அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். இதன் மூலம் 40 லட்சம் ஊழியர்களும் 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து