எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அ.தி.மு.க.வில் 5 லட்சம் இளைஞர்களை புதிய உறுப்பினர்களை சேர்க்க அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் எடப்பாடி தொடங்கிவைத்தார்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை, ஜெயலலிதா பேரவையின் சார்பில் எழுச்சியுடன் கொண்டாடுவது தொடர்பாக அம்மா பேரவையின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது, வருவாய்த்துறை அமைச்சரும் ஜெயலலிதா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தை, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்; அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் , ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்தும், அ.தி.மு.க. உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்கள் பதிவை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்த்தலுக்கான பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
70 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள்
இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழாவினை "நாட்டு மக்களின் நல்வாழ்வு தின" மாக, ஜெயலலிதா பேரவை சார்பில் ஆண்டு முழுவதும் கடைப்பிடித்து, அனைத்துப் பிரிவினருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி, அன்னதானம், இரத்ததானம், கண் தானம் போன்றவற்றை வழங்கி, ஜெயலலிதாவின் பிறந்த தின விழாவினை, உலகமே பாராட்டுகின்ற வகையில், அம்மா பேரவை சார்பில் கொண்டாடுவதோடு, அவரது திருப்பெயரால்70 வகையான சீர்வரிசைகளோடு, 70 திருமணங்களையும் நடத்துவதென தீர்மானிக்கிறது.
மேலும் ஒட்டு மொத்த இளைய சமுதாயத்தை ஊக்குவிக்கும் வகையில், 10,000 இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பங்கு கொள்கின்ற "மாபெரும் இளைஞர் பெருவிழா" வினையும்; கிராமப் பாரம்பரிய வீர விளையாட்டான "ரேக்ளா ரேசி" னையும், கிராம இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இன்னும் பல்வேறு மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தி உலகமே வியக்கின்ற வகையில், ஆண்டு முழுவதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 70-வது பிறந்த தின விழாவினைக் கொண்டாடிட அம்மா பேரவை சூளுரை ஏற்கிறது.
5 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க முடிவு
புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமினை தீவிரமாகக் கடைப்பிடித்து, கிராமம், கிராமமாகச் சென்று, 5 லட்சம் இளைஞர், இளம் பெண்களை அ.தி.மு.க கழகத்தில் புதிய உறுப்பினர்களாக சேர்த்து, ஒட்டுமொத்த இளைய சமுதாயத்தின் அடையாளமாகத் திகழ்கின்ற இந்தியத் திருநாட்டின் ஒரே அரசியல் இயக்கம் அ.தி.மு.க. ஒன்றுதான் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்ற வகையில், "புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமினை" நடத்திட, ஜெயலலிதா பேரவை இக்கூட்டத்தின் வாயிலாக உறுதியேற்கிறது.
சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், ஈடில்லா தியாகத்தினையும், அயராத உழைப்பினையும், வற்றாத அன்பினையும், வாழும் வரலாறாக, வருங்கால தலைமுறைக்கு வழங்கிடும் வகையில், அவரது முழு உருவப் படத்தை, வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் திறந்து வைத்து, வரலாறு படைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப் பேரவைத் தலைவர், ப.தனபால் ஆகியோருக்கு, ஜெயலலிதா பேரவை கோடானு கோடி நன்றி மலர்களை காணிக்கையாக்கி வணங்குகிறது.
அ.தி.மு.க. அலுவலகத்தில் ஜெயலலிதா உருவச்சிலை
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வங்கக் கடலோரம், மிகப் பிரமாண்டமான நினைவு மண்டபம் அமைத்து, வருகின்ற காலமெல்லாம் அனைவரும் வந்து வணங்கிச் செல்லும் "புனித வழிபாட்டுத் தலமாக" உருவாக்கித் தந்திட அயராது உழைத்துக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரோடு இணைந்து ஆதரவு அளித்து துணை நிற்கின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும், அம்மா வாழ்ந்து வரலாறு படைத்திட்ட "போயஸ் தோட்ட இல்லத்தை", பொதுமக்கள் அனைவரும் வந்து பார்த்து வணங்கிச் செல்கின்ற வகையில் "நினைவு இல்லமாகவும்", அ.தி.மு.க. அலுவலகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முழுஉருவச் சிலையை நிறுவிட மிக விரைவாக நடவடிக்கை எடுத்திட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ஜெயலலிதா பேரவை கோடானு கோடி நன்றி மலர்களை காணிக்கையாக்கி வணங்குகிறது.
பல்வேறு சோதனைகளை, சாதனைகளாக்கி, நெருப்பாற்றில் நீந்தி, சரித்திர சாதனை பல படைத்திட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தியாகத்தால், அயராத உழைப்பால், உருவாக்கப்பட்ட இச்சீர்மிகு தலைமைக் கழக கட்டிடத்திற்கு "அம்மா அன்பு மாளிகை" என்ற திருப்பெயரைச் சூட்ட வேண்டும் என்றும், அவரது முழு திருவுருவச் சிலையினை தமிழக சட்டமன்ற வளாகத்திலும், இந்திய நாடாளுமன்ற வளாகத்திலும் திறந்திட வேண்டும் என்றும், நாடாளுமன்ற வளாகத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தியாக வாழ்விற்கு நன்றி செலுத்தும் வகையில், அவரது திருவுருவப் படத்தினை திறந்திட வேண்டும் என்றும், இத்திருப்பணிகளை எல்லாம் வெற்றிகரமாக நிறைவேற்றிட அனைத்து சட்ட பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிட, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஜெயலலிதா பேரவை வேண்டுகிறது. இவ்வாறு அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா
22 Apr 2024டெல் அவிவ் : இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளார்.
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு
22 Apr 2024இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி
22 Apr 2024புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
மக்களவை தேர்தல்: சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
22 Apr 2024சூரத் : சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில
-
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு: 24,000 பணியிட உத்தரவுகளை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்க ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ம் ஆண்டு
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்"
22 Apr 2024நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான படமாக இப்படம் உருவாகியுள்ளார் அறிமுக இயக்குந
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சு கட்சி அமோக வெற்றி
22 Apr 2024மாலே : மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சு தலைமையிலான பி.என்.சி. கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.