எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அ.தி.மு.க.வில் 5 லட்சம் இளைஞர்களை புதிய உறுப்பினர்களை சேர்க்க அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் எடப்பாடி தொடங்கிவைத்தார்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை, ஜெயலலிதா பேரவையின் சார்பில் எழுச்சியுடன் கொண்டாடுவது தொடர்பாக அம்மா பேரவையின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது, வருவாய்த்துறை அமைச்சரும் ஜெயலலிதா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தை, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்; அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் , ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்தும், அ.தி.மு.க. உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்கள் பதிவை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்த்தலுக்கான பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
70 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள்
இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழாவினை "நாட்டு மக்களின் நல்வாழ்வு தின" மாக, ஜெயலலிதா பேரவை சார்பில் ஆண்டு முழுவதும் கடைப்பிடித்து, அனைத்துப் பிரிவினருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி, அன்னதானம், இரத்ததானம், கண் தானம் போன்றவற்றை வழங்கி, ஜெயலலிதாவின் பிறந்த தின விழாவினை, உலகமே பாராட்டுகின்ற வகையில், அம்மா பேரவை சார்பில் கொண்டாடுவதோடு, அவரது திருப்பெயரால்70 வகையான சீர்வரிசைகளோடு, 70 திருமணங்களையும் நடத்துவதென தீர்மானிக்கிறது.
மேலும் ஒட்டு மொத்த இளைய சமுதாயத்தை ஊக்குவிக்கும் வகையில், 10,000 இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பங்கு கொள்கின்ற "மாபெரும் இளைஞர் பெருவிழா" வினையும்; கிராமப் பாரம்பரிய வீர விளையாட்டான "ரேக்ளா ரேசி" னையும், கிராம இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இன்னும் பல்வேறு மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தி உலகமே வியக்கின்ற வகையில், ஆண்டு முழுவதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 70-வது பிறந்த தின விழாவினைக் கொண்டாடிட அம்மா பேரவை சூளுரை ஏற்கிறது.
5 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க முடிவு
புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமினை தீவிரமாகக் கடைப்பிடித்து, கிராமம், கிராமமாகச் சென்று, 5 லட்சம் இளைஞர், இளம் பெண்களை அ.தி.மு.க கழகத்தில் புதிய உறுப்பினர்களாக சேர்த்து, ஒட்டுமொத்த இளைய சமுதாயத்தின் அடையாளமாகத் திகழ்கின்ற இந்தியத் திருநாட்டின் ஒரே அரசியல் இயக்கம் அ.தி.மு.க. ஒன்றுதான் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்ற வகையில், "புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமினை" நடத்திட, ஜெயலலிதா பேரவை இக்கூட்டத்தின் வாயிலாக உறுதியேற்கிறது.
சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், ஈடில்லா தியாகத்தினையும், அயராத உழைப்பினையும், வற்றாத அன்பினையும், வாழும் வரலாறாக, வருங்கால தலைமுறைக்கு வழங்கிடும் வகையில், அவரது முழு உருவப் படத்தை, வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் திறந்து வைத்து, வரலாறு படைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப் பேரவைத் தலைவர், ப.தனபால் ஆகியோருக்கு, ஜெயலலிதா பேரவை கோடானு கோடி நன்றி மலர்களை காணிக்கையாக்கி வணங்குகிறது.
அ.தி.மு.க. அலுவலகத்தில் ஜெயலலிதா உருவச்சிலை
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வங்கக் கடலோரம், மிகப் பிரமாண்டமான நினைவு மண்டபம் அமைத்து, வருகின்ற காலமெல்லாம் அனைவரும் வந்து வணங்கிச் செல்லும் "புனித வழிபாட்டுத் தலமாக" உருவாக்கித் தந்திட அயராது உழைத்துக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரோடு இணைந்து ஆதரவு அளித்து துணை நிற்கின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும், அம்மா வாழ்ந்து வரலாறு படைத்திட்ட "போயஸ் தோட்ட இல்லத்தை", பொதுமக்கள் அனைவரும் வந்து பார்த்து வணங்கிச் செல்கின்ற வகையில் "நினைவு இல்லமாகவும்", அ.தி.மு.க. அலுவலகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முழுஉருவச் சிலையை நிறுவிட மிக விரைவாக நடவடிக்கை எடுத்திட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ஜெயலலிதா பேரவை கோடானு கோடி நன்றி மலர்களை காணிக்கையாக்கி வணங்குகிறது.
பல்வேறு சோதனைகளை, சாதனைகளாக்கி, நெருப்பாற்றில் நீந்தி, சரித்திர சாதனை பல படைத்திட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தியாகத்தால், அயராத உழைப்பால், உருவாக்கப்பட்ட இச்சீர்மிகு தலைமைக் கழக கட்டிடத்திற்கு "அம்மா அன்பு மாளிகை" என்ற திருப்பெயரைச் சூட்ட வேண்டும் என்றும், அவரது முழு திருவுருவச் சிலையினை தமிழக சட்டமன்ற வளாகத்திலும், இந்திய நாடாளுமன்ற வளாகத்திலும் திறந்திட வேண்டும் என்றும், நாடாளுமன்ற வளாகத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தியாக வாழ்விற்கு நன்றி செலுத்தும் வகையில், அவரது திருவுருவப் படத்தினை திறந்திட வேண்டும் என்றும், இத்திருப்பணிகளை எல்லாம் வெற்றிகரமாக நிறைவேற்றிட அனைத்து சட்ட பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிட, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஜெயலலிதா பேரவை வேண்டுகிறது. இவ்வாறு அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..! வெள்ளி விலை புதிய உச்சம்
24 Dec 2025சென்னை, சென்னையில் தங்கம் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 400-க்கு விற்பனையாகி புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
த.வெ.க. கூட்டணியில் இணைய ஓ.பன்னீர்செல்வம் அணி முடிவு? 38 தொகுதிகளை கேட்டுப்பெறவும் முடிவு
24 Dec 2025சென்னை, த.வெ.க.
-
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை: கிறிஸ்துவ பெருமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: சிறுபான்மையினருக்கு காவலனாக இருப்போம் என உறுதி
24 Dec 2025சென்னை, இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தி.மு.க.
-
விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம்: ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கீடு: செய்து அரசாணை வெளியீடு
24 Dec 2025சென்னை, விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம் வழங்க ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்தற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
-
தமிழக அரசியல் வரலாற்றின் பொற்காலம்: எம்.ஜி.ஆருக்கு இ.பி.எஸ். புகழஞ்சலி
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆரின் நினைவு நாளில், நம் உயிர்நிகர் தலைவரை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசியல் வரலாற்றின் பொற்கால அத்தியாயம் என்று புகழஞ்சல
-
விஜய் ஹசாரே கோப்பை: 50 ஓவர்களில் 574 ரன்களை எடுத்து பீகார் அணி சாதனை
24 Dec 2025பாட்னா, விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் 50 ஓவர்களில் 574 ரன்கள் எடுத்து பீகார் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
-
ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு: இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டம்
24 Dec 2025சென்னை, ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு - இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டமிட்டுள்ளது.
-
நாட்டில் புதிதாக மேலும் 3 விமான நிறுவனங்களுக்கு அனுமதி
24 Dec 2025புதுடெல்லி, உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறையை மேலும் பலப்படுத்தும் விதமாக மூன்று விமான நிறுவனங்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
-
சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க நாம் உறுதியேற்போம்: பெரியாரின் நினைவு நாளில் இ.பி.எஸ். பதிவு
24 Dec 2025சென்னை, தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி தந்தை பெரியார் என்று எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
அன்பு, அமைதி தழைக்க வேண்டும்: கிறிஸ்துவ பெருமக்களுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
24 Dec 2025சென்னை, அன்பு, அமைதி, சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என்று இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்களுக்கு அ.தி.மு.க.
-
ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு
24 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மீட்டெடுக்க தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர் என
-
கடலூர்: திட்டக்குடி அருகே சாலை விபத்தில் 7 பேர் பலி
24 Dec 2025கடலூர், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சாலை விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை செலுத்திய செங்கோட்டையன்
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆர். படத்திற்கு த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார்.
-
100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம்: தமிழ்நாட்டில் தி.மு.க.-கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
24 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் தொடர்பாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
இலங்கைக்கு இந்தியா உதவி செய்வது ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிக்கிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்
24 Dec 2025கொழும்பு, புயல் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண உதவி செய்து வருவது ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிக்கிறது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
-
6,100 கிலோ செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் முதல்முறையாக இஸ்ரோ புதிய சாதனை
24 Dec 2025ஸ்ரீஹரிகோட்டா, அமெரிக்காவின் ஏ.எஸ்.டி.
-
எம்.ஜி.ஆர். பாதையில் பயணித்திட உறுதியேற்போம்: டிடிவி தினகரன்
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆர். பாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
-
தன்மானம் காக்க, தன்னையே தந்தவர்: பெரியாரின் 52-வது நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
24 Dec 2025சென்னை, தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்தவர் பெரியார் என்று அவரின் 52-வது நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.34.30 கோடி மதிப்பிலான 20 அதிநவீன குளிர்சாதன பேருந்துகளின் சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
24 Dec 2025சென்னை, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.34.30 கோடி மதிப்பிலான பல அச்சுகள் கொண்ட 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று
-
தமிழகத்தை பாசிச சக்திகளால் ஒன்றுமே செய்ய முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
24 Dec 2025சென்னை, ஜனநாயகத்தில் வலிமை மிக்க சக்திகள் ஒன்று சேர்ந்து இருக்கும் போது எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது என கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் 
-
இன்று அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி பயணம்
24 Dec 2025கள்ளக்குறிச்சி, வீரசோழபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெறும் அரசு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இன்று (
-
எல்.வி.எம்.-3 திட்டம் வெற்றி: விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
24 Dec 2025புதுடெல்லி, எல்.வி.எம்.-3 திட்டம் வெற்றியை அடுத்து விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா: அரசியல் பேச்சுக்கு தடை விதித்த மலேசியா போலீஸ்
24 Dec 2025கோலாலம்பூர், ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் ரீதியாக பேசுவதற்கு மலேசியா போலீஸ் தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கங்களுக்கு அனுமதியா? மத்திய அரசு விளக்கம்
24 Dec 2025புதுடெல்லி, டெல்லி முதல் குஜராத் வரையிலான முழு ஆரவல்லி மலைத்தொடரையும் மத்திய அரசு பாதுகாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
24 Dec 2025சென்னை, முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


