முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா மரண விவகாரம்: நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் சமையல்காரர் ராஜம்மாள் ஆஜர்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனில் ஜெயலலிதாவின் சமையல்காரர் ராஜம்மாள் ஆஜராகி உள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள விசாணை கமிஷன் பலரிடமும் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்தவர்கள், அவருடன் தொடர்புடையவர்கள், சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்கள் என பலருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது.

இந்நிலையில் ஜெயலலிதா வீட்டில் பணிபுரிந்தோரிடம் விசாரணை நடந்து வருகிறது. போயஸ் கார்டனில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, சமையலராக இருந்த ராஜம்மாள், நேற்று விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். இவர் நீண்ட காலமாக போயஸ்கார்டனில் சமையலராக இருப்பதால் வீட்டிற்குள் நடந்த விவகாரங்கள் அனைத்தும் அவருக்கு தெரியும் என கூறப்படுகிறது. எனவே, விசாரணை கமிஷனில்,  அவர் தெரிவிக்கும் தகவல்கள் விசாரணையில் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மறைந்த பிறகும், அவரது போயஸ் கார்டன் இல்லத்திலேயே, ராஜம்மாள் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து