முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை - ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு : ஜம்மு-காஷ்மீர் அனந்தநாக் மாவட்டத்தில் நேற்று பாதுகாப்புப் படையினரோடு மோதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் சண்டை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் ஹகுரா பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக தகவல் வந்ததையடுத்து அவர்களுக்கு எதிரான நடவடிக்கை நேற்று முன்தினம் நள்ளிரவில் நடத்தப்பட்டதாக ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் நேற்று அதிகாலை மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஆயுதங்கள் பறிமுதல்

இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

கொல்லப்பட்டவர்களில் இருவர் ஸ்ரீநகரைச் சேர்ந்த ஈஸா பாஸ்லி மற்றும் அனந்தநாக் மாவட்டத்தின் கோகர்நாக்கைச் சேர்ந்த ஓவாய்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட மூன்றாவது தீவிரவாதியின் அடையாளமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சண்டை நடைபெற்ற இடத்திலிருந்து ஏ.கே. 47 துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள், மற்றவகைத் துப்பாக்கிகள், கையெறிகுண்டுகள் போன்றவையும் மீட்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினரின் இந்த ஆபரேஷன் நடவடிகைக்கையின் போது வேறு எந்த சேதாரங்களும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார். மேலும் கொல்லப் பட்ட தீவிரவாதிகள் மூவரும் சமீபத்தில் சவுரா நகரில் இருந்த ஒரு காவல் உதவி மையத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் என்றும் அந்த தாக்குதலின் போது ஒரு காவலர் உயிரிழந்தார் என்றும் காவல் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து