எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவும் மத்திய அரசு அமைக்கும் என்ற சூழல் ஏற்படும் எனவும், அதற்காக பொறுத்திருப்போம். அதற்கு எந்த மாதிரி அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று நாமெல்லாம் மீண்டும் கூடிப்பேசி ஒரு நல்ல முடிவை எடுப்போம் என துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
கவன ஈர்ப்பு தீர்மானம்
தமிழக சட்டசபையில் நேற்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது,
காவிரி நீர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வெளிவந்தவுடன், 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி ஒரு ஆங்கில பத்திரிகையில் அளித்திருந்த பேட்டியை நாம் பார்த்தோம். காவிரி விவகாரம் குறித்து நடைபெற்ற மாநில தலைமைச் செயலாளர்களின் கூட்டம் முடிந்த பிறகு, காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் இல்லை என்று மத்திய நீர்வளத்துறையின் செயலாளர் வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார். மத்திய நீர்வளத்துறையின் செயலாளர் யு.பி.சிங் 6 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று பேட்டியளித்து இருக்கிறார்.
எதற்கும் பயனில்லை
நம்முடைய மாநிலத்தின் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டுமென நாம் பல முயற்சிகளில் ஈடுபட்டும், எதற்கும் பயனில்லை என்ற சூழலில், மத்திய அரசு மீது ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. அரசு அங்கேயிருக்கின்ற உங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக கொண்டு வந்து, ஒரு அழுத்தம் தர வேண்டும். அதுமட்டுமல்ல, 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கான பணியில், இந்த அரசு உடனே ஈடுபட வேண்டும் என்றார்.
வலியுறுத்தி வருகிறோம்
இதற்கு பதிலளித்து பேசிய துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம்,
காவிரிப் பிரச்சினையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது, காவிரி நடுவர் மன்றத்தினுடைய பிரச்சினையை, தாவாவை, நீர்ப் பங்கீட்டு முறையைப் பற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தினுடைய தீர்ப்பில் விளக்கமாகவும், விவரமாகவும் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு என்ற அந்தச் சொற்றொடரும் இறுதி செய்யப்பட்டிருக்கின்றன. இறுதி செய்யப்பட்ட அந்தச் சொற்றொடரைத் தான் தமிழக அரசின் சார்பாக, மக்களின் சார்பாக ஒவ்வொரு நிலையிலும் எங்களுடைய தன்மை, உறுதித்தன்மை, நீடித்த, நிலைத்த தன்மை அதுதான் என்று நாங்கள் தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து நாம் அனைவரும் வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.
5 நாட்கள் இருக்கின்றன
இந்தப் பிரச்சினை மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றபொழுது, உச்ச நீதிமன்றமும் ஒரு தீர்மானத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இரு மாநிலங்கள் அல்லது 3 மாநிலங்கள் என்று வருகின்ற பிரச்சினைகளாக இருந்தால், உச்ச நீதிமன்றத்தில் அந்தப் பிரச்சினையை எடுத்துச் செல்லுகின்ற பொழுது வழங்கப்படுகின்ற தீர்ப்பினை அமல்படுத்துகின்ற கடமையும், பொறுப்பும் மத்திய அரசுக்கு இருக்கிறது. ஆகவே, மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தில் சொல்லப்பட்ட அந்த காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நநிநீர் முறைப்படுத்தும் குழுவையும் 6 வார காலத்திற்குள் அமைத்திட வேண்டுமென்ற உறுதியான தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. ஏற்கெனவே சொன்னதுபோல, இன்னும் 4, 5 நாட்கள் இருக்கின்றன ஆகவே, அதை தினமும் எதிர்க்கட்சித் தலைவர் எங்களுக்கு நினைவூட்டலாகச் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்.
13 நாட்களாக...
நீங்கள் எந்தளவுக்கு அந்தப் பிரச்சினையில் அழுத்தம் தருகிறீர்களோ, அதற்கும் மேலாக எங்களுடைய அழுத்தம் பாராளுமன்றத்தில் தினமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 13 நாட்களாக சபையே நடக்காதவாறு அங்கே இந்தப் பிரச்சினையை எடுத்துச் சென்று, பாராளுமன்றத்தில் இருக்கின்ற அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தளவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறார்களோ அந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்கின்ற காரணத்தினால்தான் பாராளுமன்றமே 13 தினங்களாக முடங்கிப் போயிருக்கிறதென்ற சரித்திரத்தை தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கியிருக்கின்றனர்.
அரசுக்கு வந்து சேரவில்லை
இந்த அளவிற்கு நாம் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பிரச்சினையில் சட்டத்தின் மூலமாக, நீதிமன்றத்தின் மூலமாக வழங்கப்பட்ட தீர்ப்பினை மத்திய அரசு செயல்படுத்துகிறதா என்ற நிலை இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது. மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சில கருத்துகளைச் சொல்லியிருக்கின்றார். அந்தக் கருத்துகள் எந்தளவிற்கு அவர் என்ன நினைத்துச் சொன்னார் என்ற விவரம் இன்னும் அரசுக்கு வந்து சேரவில்லை. முழு விவரமும் தெரிந்து அதனை இந்த மாமன்றத்திற்குத் தெரிவிப்பது எங்களுடைய கடமை என்றே நான் கருதுகிறேன். பொறுத்திருப்போம்.
நல்ல முடிவை எடுப்போம்
அது எந்த நிலையை அடைகின்றது என்ற நிலையைத் தீர ஆராய்ந்து, மீண்டும் அனைவரும் கூடிப்பேசி, எந்தமாதிரியான சூழ்நிலையை ஏற்படுத்தினால் காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவும் மத்திய அரசு அமைக்கும் என்ற சூழல் ஏற்படும், அதற்கு எந்த மாதிரி அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று நாமெல்லாம் கூடிப்பேசி ஒரு நல்ல முடிவை எடுப்போம். இவ்வாறு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 18 hours ago |
ஆனியன்ப்ரை5 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
வாக்குச்சாவடியில் வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ. திருப்பித்தாக்கியதால் பரபரப்பு
13 May 2024தெனாலி : ஆந்திர மாநிலத்தில் வாக்குச் சாவடி ஒன்றில் வாக்களிக்க வந்த எம்எல்ஏவை வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை எம்எல்ஏ கன்னத்தில் அறைந்தார்.
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது