முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மல்லையாவின் நிறுவனங்களை முடக்க என்.எஸ்.இ. பங்கு நிறுவனம் முடிவு

திங்கட்கிழமை, 21 மே 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் பிளெடிகோ மருந்துகள் உள்ளிட்ட 16 நிறுவனங்களை முடக்குவதற்கு முன்னணி பங்கு பரிவர்த்தனை நிறுவனமான என்.எஸ்.இ முடிவு செய்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில், மார்க்கெட்டிங் ரெகுலேட்டர் செபி 331 சந்தேகத்திற்குட்பட்ட ஷெல் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தது. அதே நேரத்தில் நீண்ட காலத்திற்கு வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளாத 2 லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பதிவை அரசு ஏற்கனவே நீக்கியுள்ளது. மேலும் அந்நிறுவனங்களில் ஈக்விட்டி பங்குகளை நீக்க தேசிய பங்குச் சந்தை முடிவெடுத்துளதாகவும் இது மே மாதம் 30-ல் நடைமுறைக்கு வரும் என்றும் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் பிளெட்டிகோ தவிர, ஆக்ரோ டச்சு இண்டஸ்ட்ரீஸ், பிராட்காஸ்ட் இன்டீடியாட்ஸ், க்ரெஸ்ட் அனிமேஷன் ஸ்டுடியோஸ், கே.டி.எல் பயோடெக், கெம்ரோக் இண்டஸ்ட்ரீஸ் அண்ட் எக்சர்ட்ஸ், லூமக்ஸ் ஆட்டோமேஷன் சிஸ்டம்ஸ், நிசான் செப்பர், ஸ்ரீ அஸ்டர் சிலிகேட்ஸ் மற்றும் சூர்யா பார்மாசிகல்ஸ் ஆகியவையும் நீக்கப்பட்ட பட்டியலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து