எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகங்கை, -சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாநில அளவில் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றதற்காக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன்; முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் க.லதா தலைமை வகித்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி பேசுகையில்,
சிவகங்கை மாவட்டம் சுதந்திர போராட்டத்திற்கு போராடி வெற்றி கண்ட வீரம் நிறைந்த மண்ணாகும். இந்த மண்ணிற்கு மீண்டும் ஒரு மணிமகுடம் சூடும் வகையில் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் 98.50மூ தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ்தமைக்கு மாவட்ட முழுவதும் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளோம். மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கொண்ட குழுவே இதற்கு முழுக் காரணமாகும். நீங்கள் கூடி உழைத்த முயற்சியில் கிடைத்த வெற்றி எங்களை மாவட்டத்தில் தலைநிமிரச் செய்துள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியர் பணி என்பது மகத்தான பணியாகும். ஒருவருக்கு திருப்புமுனையை உருவாக்கும் வல்லமை படைத்த சக்தி ஆசிரியர்களுக்கு மட்டுமே உண்டு. ஒவ்வொரு மாணவனும் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறும்போது அந்த மாணவன் திரும்பி பார்க்கையில் அவன் முகத்தில் தெரிவது அவனுக்கு வழிகாட்டியே அந்த ஆசிரியர் முகம்தான். அதன் பின்னர்தான் தனது பெற்றோர்கள் பற்றி நினைவு வரும். அந்த அளவிற்கு ஆசிரியர் பணி மிக உன்னதமாகும். அதற்கேற்ப ஆசிரியர்களும் தங்களிடம் பயிலும் மாணவர்களை சிறந்த வல்லுநர்களாக உருவாக்கும் திறன் உள்ளது. அதன்படி சிறந்த முறையில் மாணவர்களை உருவாக்கிட வேண்டும். மாணவர்களும் தங்கள் பெற்றோர்களுக்கு மேலாக ஆசிரியர்களை நினைத்து தங்களை நல்வழிப்படுத்த முன்வரும் ஆசிரியர்களை நினைவு கூர்ந்து நன்றாகப் படித்து சிறந்த சாதனையாளராக வேண்டும். தற்பொழுது 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்;வில் மாநில அளவில் முதலிடம் பெற்று சிறந்த சாதனை படைத்துள்ளீர்கள். சாதனை பெறுவது இயல்பு. ஆனால் அதை தக்கவைப்பது என்பது இங்குள்ள ஒவ்வொரும் தலையாகிய கடமையாகும். அதை உறுதிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும்; இந்த வெற்றியை
தக்க வைக்க வேண்டும். அதேபோல் மேல்நிலை தேர்வு முடிவுகளில் சிவகங்கை மாவட்டம் 6-ம் இடத்தை பெற்றுள்ளது. அதிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்திட வேண்டும். உங்களுடைய வெற்றிக்கு மாவட்ட நிர்வாகம் எப்பொழுதுமே உறுதுணையாக இருக்கும். நீங்கள் சிறப்புடன் செயல்பட வேண்டும். வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.லதா தெரிவித்தார்.
பின்னர் 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 182 பள்ளிகளுக்கும், 12ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 54 பள்ளிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கியதுடன் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பில் கல்வியில் சிறந்து விளங்கியதுடன் தனித்திறன் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்களை பாராட்டும் விதமாக 12ம் வகுப்பை சேர்ந்த 15 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.15,000 - காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ், 10ம் வகுப்பை சேர்ந்த 15 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.10,000 - காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கியதுடன் மேலும் நடப்பாண்டில் விசாலயன்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியை தமிழக அரசால் அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் து.இளங்கோ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மாரிமுத்து, சகிதா மற்றும் அரசு அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட்டில் கம்மின்ஸ்
03 Dec 2025ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
-
ஐ.சி.சி. தரவரிசை பட்டியல்: முதலிடத்தில் ரோகித் சர்மா; விராட் கோலி முன்னேற்றம்
03 Dec 2025துபாய் : ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
-
தாழ்வுப்பகுதியாக வலுவிழந்து மண்டலம்: இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
03 Dec 2025சென்னை : காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்துள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இன்று ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனம
-
மும்பை விமான நிலையத்தில் ரூ.94 லட்சம் மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்
03 Dec 2025மும்பை : மும்பை விமான நிலையத்தில் உயரக கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.
-
கார்த்திகை தீபத்திருவிழா: பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு
03 Dec 2025பழனி : கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் பரணி தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது
-
ரஷ்ய கப்பல்கள் மீது தாக்குதல்: உக்ரைனுக்கு புதின் கடும் எச்சரிக்கை
03 Dec 2025மாஸ்கோ : உக்ரைன் துறைமுகங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதை அடுத்து ரஷ்ய அதிபர் புதின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மாற்றியமைப்பு
03 Dec 2025டெல்லி : பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மாற்றியமைக்கப்பட்டு புதிய உறுப்பினர்களின் பெயர்களை பட்டியலிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை சரிவு
03 Dec 2025சென்னை : சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது.
-
கம்ப்யூட்டரை ‘ஆன்' செய்யாமல் துணை முதல்வர் ஆய்வு செய்தாரா? - தமிழக அரசு விளக்கம்
03 Dec 2025சென்னை : மழை பாதிப்பு புகார் மீதான நடவடிக்கைக்கு கம்ப்யூட்டரை ஆன் செய்யாமல் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
-
டி-20 தொடருக்கு கில் ரெடி?
03 Dec 2025மும்பை : காயம் காரணமாக சுப்மன் கில் அணியில் இடம் பெறுவாரா இல்லையா என சந்தேகம் எழுந்த நிலையில் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட தயாராக உள்ளதாக தகவ
-
15 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் ஹசாரே தொடரில் கோலி
03 Dec 2025மும்பை : 15 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விஜய் ஹசாரே தொடரில் விளையாட விராட் கோலி விருப்பம் தெரிவித்துள்ளதாக தில்லி கிரிக்கெட் சங்கம் உறுதிபடுத்தியுள்ளது.
-
பிரேசிலில் உயிரியல் பூங்காவில் வாலிபரை தாக்கி கொன்ற சிங்கம்
03 Dec 2025பிரேசிலியா : பிரேசிலில் உயிரியல் பூங்காவில் தடுப்புச் சுவரை தாண்டி குதித்த வாலிபரை சிங்கம் தாக்கி கொன்றது.
-
இங்கிலாந்தில் மருத்துவர்கள் ஸ்டிரைக்
03 Dec 2025லண்டன் : இங்கிலாந்தில் மருத்துவர்கள் வேலை நிறுத்த போட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அரசு பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை என்று தெரிகிறது.
-
சபரிமலை பக்தர்கள் ரயில்களில் கற்பூரம் ஏற்ற தெற்கு ரயில்வே தடை
03 Dec 2025சென்னை : சபரிமலை பக்தர்கள் ரயில்களில் கற்பூரம் ஏற்ற தடை விதித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
-
இன்று 9-ம் ஆண்டு நினைவு நாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
04 Dec 2025சென்னை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று மெரினா கடற்கரையில் 'உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க.
-
பெரு நாட்டில் ஆற்றில் படகுகள் கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழப்பு
03 Dec 2025லிமா : பெரு நாட்டில் ஆற்றில் படகுகள் கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்தனர்.
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ருதுராஜ், கோலி அபார சதம்
03 Dec 2025ராய்ப்பூர் : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கோலி தனது 53-வது சதத்தை பூர்த்தி செய்தார்.
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
04 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
04 Dec 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 5,141 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,619 கன அடியாக சரிந்துள்ளது.
-
எக்ஸ் தளத்தில் கார்த்திகை தீபம் வாழ்த்து பதிவை நீக்கி மீண்டும் பதிவிட்ட செங்கோட்டையன்
04 Dec 2025கோபிசெட்டிபாளையம், எக்ஸ் தளத்தில் கார்த்திகை தீபம் வாழ்த்து பதிவை நீக்கிய நிலையில் செங்கோட்டையன் மீண்டும் அதே பதிவை பதிவிட்டுள்ளார்.
-
மதீனா-ஐதராபாத் விமானத்திற்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்
04 Dec 2025காந்திநகர், மதீனா - ஐதராபாத் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
டெல்லி காற்றுமாசு விவகாரம்: பார்லி., வளாகத்தில் முகக்கவசம் அணிந்து எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
04 Dec 2025டெல்லி, டெல்லி காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பாராளுமன்ற வளாகத்தில் நேற்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
தங்கம் விலை சற்று சரிவு
04 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மையை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்: பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தல்
04 Dec 2025புது தில்லி, ‘தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை முயற்சிகளைக் கண்டு வியப்படைந்தேன்.
-
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி விவகாரம்: பிரதமர் நரேந்திரமோடி விளக்கமளிக்க மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்
04 Dec 2025புதுடெல்லி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.



