முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து விசாரணை

சனிக்கிழமை, 26 மே 2018      தமிழகம்
Image Unavailable

ராமேஸ்வரம்: பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பில் பேசியவன், “பாம்பன் பாலத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்” என கூறி விட்டு போனை வைத்து விட்டான். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் மற்றும் போலீசார் பாம்பன் பாலம் விரைந்தனர். அவர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.

போனில் பேசிய மர்ம மனிதன் பாம்பன் பாலம் என்று மட்டுமே கூறிய நிலையில் எந்த பாலம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் ரயில் மற்றும் சாலை பாலங்களை அதிரடியாக சோதனை செய்தனர். இதன் காரணமாக பாம்பன் பாலம் பகுதியில் நேற்று பரபரப்பு காணப்பட்டது. தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து