முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வில் தோல்வி: டெல்லி மாணவர் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் டெல்லியைச் சேர்ந்த மாணவர் பர்ணவ் மெகந்திரதா 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன.

மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு கொண்டு வந்தது முதல் மாணவ, மாணவிகளின் உயிர்பலி தொடர்கிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு அனிதா, நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டு விழுப்புரம் மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், டெல்லி துவாரகா செக்டார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரணவர் மகேந்திரதா என்ற மாணவர் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாணவரின் அறையில் கிடைத்த கடிதத்தில், நேற்று வெளியான தேர்வு முடிவுகளில் நான் தோல்வி அடைந்து விட்டேன். ஆனால், இதை மறைத்து என் பெற்றோர்களிடம் பொய்கூறி விட்டேன் என எழுதியிருந்ததாகவும் அவரது அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டா ஒன்று கட்டித் தொங்கிக் கொண்டிருந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து