முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ் கொலை கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு - அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைபாடு என்றும், அற்புதம்மாளின் வேதனையை அரசு உணர்ந்துள்ளது என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

அரசின் நிலைபாடு...

அ.தி.மு.க. அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைபாடு; அரசின் நிலைப்பாட்டை சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துரைத்து வெற்றி காண்போம்.

அரசு உணர்ந்துள்ளது...

பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின் வேதனையை அரசு உணர்ந்துள்ளது. தமிழகத்தில் வருங்காலத்தில் நிலத்தடி நீர் குறையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலைச் சந்திப்போம் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருப்பது குரங்குக் குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போன்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து