முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் திரும்பும் முடிவை கைவிட்டார் பர்வேஸ் முஷாரப்

வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

கராச்சி: தம்மை கைது செய்யும்படி நீதிமன்றம் மறைமுகமாக உத்தரவிட்டிருப்பதால், பாகிஸ்தானுக்கு திரும்பும் முடிவை கைவிட்டுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அதிபராக பர்வேஸ் முஷாரப் இருந்த போது, அவசர நிலையை பிரகடனம் செய்தது, நீதிபதிகளை கைது செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. மேலும், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் அவர் மீது பல தேசத் துரோக வழக்குகளும் தொடுக் கப்பட்டிருக்கின்றன. இதனிடையே, 2016-ம் ஆண்டு முதல் லண்டனில் தங்கியிருக்கும் முஷாரப், அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிட அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அண்மை யில் விசாரித்த நீதிமன்றம், அவரை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. இதன்பேரில், பாகிஸ்தான் திரும்புவதாக அறிவித்த முஷாரப், தன்னை கைது செய்ய தடைவிதிக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார். இதையடுத்து, முஷாரப் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும் வரையில், அவரைக் கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவானது, தம்மை கைது செய்யுமாறு மறைமுக மாக தெரிவிப்பதால், பாகிஸ் தான் திரும்பும் முடிவை தான் கைவிட்டிருப்பதாக வீடியோ மூலமாக முஷாரப் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து