எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி - தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோரின் ஆணைக்கினங்க காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் போடிநாயக்கனூரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர்கழக செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக செயலாளர்கள் ஆர்.டி.கணேசன், சற்குணம், முன்னாள் நகர்மன்ற தலைவர் பழனிராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் கனல்காந்தி வரவேற்றார். மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம். சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கழக கொள்கைபரப்பு துணை செயலாளரும், கழக செய்தி தொடர்பாளருமான வைகைசெல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வைகை செல்வன் அவர்கள் பேசும்போது, நமது கழகத்தின் பல்வேறு போராட்டத்தின் விளைவாக தான் காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடிந்தது. அதன் வெற்றி விழாவை நாம்தான் கொண்டாட வேண்டும். காவிரி பிரச்னை மட்டுமல்ல, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியது, ஜல்லிக்கட்டு பிரச்னையை தீர்த்தது, ஸ்டெர்லைட் ஆலையை மூடியது, முல்லை பெரியார் அணையில் நீர்தேக்க அளவை 136 அடியிலிருந்து 142 அடியாக சட்டபோராட்டம் நடத்தி உயர்த்தியது, தற்போது 19 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் 1500 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தல் என பல்வேறு திட்டங்களை, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களை கொண்டு வந்தது, செயல்படுத்தியது கழக அரசு மட்டுமே. அதே நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு 280 ஏக்கர் நிலத்தை தாரைவார்த்தது, 1974ல் காவிரி நதிநீர் ஒப்பந்ததை புதுப்பிக்காதது என தமிழகத்திற்கு திமுக பல்வேறு இழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆர்.கே நகர் தேர்தலில் டி.டி.வி தினகரன் ஜெயிக்கவில்லை. 20 ரூபாய் நோட்டு ஜெயித்திருக்கிறது. தற்போது ஆர்.கே நகருக்குள் தினகரன் செல்ல முடியவில்லை. ஏனென்றால் 20 ரூபாய் நோட்டை காட்டி பத்தாயிரம் எங்கே என்று கேட்கின்றனர். ஆர்.கே நகர் தொகுதி மக்களுக்கு தினகரன் கடன்காரனாக இருக்கிறார். அவரை நம்பி போன தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களையும் நீங்கள் அனைவரும் அமைச்சர்கள் என்று கூறி அவர்களின் பிழைப்பை கெடுத்திருக்கிறார்.
ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் சமூக விரோதிகள் ஊடுருவியதே கலவரத்திற்கு காரணம் என்ற உண்மையை ரஜினிகாந்த் சொன்னார். கலவரத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் இழப்பீடும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் தருவதாக கழக அரசு அறிவித்திருக்கிறது. அதிமுக என்பது ஒரு எளிய கட்சி, தொண்டர்களின் கட்சி. இங்கு உண்மையாக உழைப்பவர்களுக்கு உயர்வு நிச்சயம். அதனால் தான் கழகம் சுமார் 28 ஆண்டுகாலமாக தமிழக மக்கள் ஆட்சியில் அமர வைத்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2016 தேர்தலின்போது தனது உடல்நிலையை கருத்தில் கொள்ளாமல் 234 தொகுதிகளுக்கும் சென்று தமிழக மக்களிடம் கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நல்ல திட்டங்களை எடுத்துக்கூறி தனித்து நின்று அமோக வெற்றி பெற்று 32 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியில் இருந்த கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்த சாதனையை செய்தார். அப்படிப்பட்ட தொண்டர்கள் பலமிக்க கட்சியை தினகரனும் அவருடைய குடும்பத்தினரும் ஒன்றும் அசைத்துவிட முடியாது.
தமிழக அரசியல் களத்தில் வெற்றிடம் என்ற மாயையை நம்பி முதியோர் பென்சன் வாங்குகின்ற வயதில் பரட்டையும், சப்பாணியும் கட்சி ஆரம்பித்துள்ளனர். தனது மனைவியிடமே கடன் வைத்துள்ள கமல், ரஜினி மனைவி நடத்திய ஆஸ்ரமம் பள்ளிக்கு வாடகை கொடுக்கவில்லை. இவர்கள் பொதுவாழ்க்கையில் எப்படி நல்லவர்களாக இருப்பார்கள். எத்தனையோ நடிகர்கள் கட்சி ஆரம்பித்தனர். எம்.ஜி.ஆர் அவர்களே எனது வாரிசு என்ற பாக்கியராஜ், நடிகர் சிவாஜி உள்ளிட்டோர் கட்சி ஆரம்பித்தனர். ஆனால் அவர்களால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியவில்லை. மக்களால் போற்றப்பட்ட ம.பொ.சி கூட அரசியலில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மிகப்பெரும் தலைவராக உருவெடுத்தார். அதற்கு காரணம் நடிகராக இருந்ததால் மக்களிடம் அறிமுகம் கிடைத்தது. நல்லவனாக இருந்ததால் முதல்வராக முடிந்தது என அவரே கூறியுள்ளார் என்றார். அரசியலில் சாதித்து காட்டியவர் புரட்சித்தலைவர். அவர் வழி வந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அதை சரியான பாதையில் கொண்டு சென்றதால் நமது கழகம் ஒன்றரை கோடி தொண்டர்களை பெற்றது. இப்படி நமது கழகம் சிறப்பாக செயல்படுவதற்கு காரணம் எளிய தொண்டனையும் சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் பல்வேறு பதவிகளில் அமர்த்தி அழகு பார்ப்பது தான். ஆனால் திமுகவில் மேல்மட்ட தலைவர்கள் ஒவ்வொருவரும் குறுநில மன்னர்களாக உள்ளனர். அவர்களை, அவர்களின் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் பதவிக்கு வந்துவிட முடியாது.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தின் நலனிற்காக பல்வேறு முடிவுகளை உடனடியாக எடுக்க கூடியவர். காவிரியில் தமிழகத்திற்குரிய தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக தயவில் மத்தியில் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த வாஜ்பாயிடம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கோரிக்கை வைத்தார். அதற்கு யோசித்த வாஜ்பாய் அரசை தூக்கி எறிந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவுக்கு பின் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி வருகின்ற ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இருவரும் அமைதியான தலைவர்கள். ஆனால் அவர்களிடம் உரசிப்பார்த்தால் அதன் விளைவுகளை அனுபவிக்கதான் வேண்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இடைவிடாத முயற்சி மற்றும் போராட்டத்தாலும், ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் ஆகியோர் மத்திய அரசிற்கு கொடுத்த அழுத்தத்தாலும் தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுவிட்டது. தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும். காவிரி எந்த மாநிலத்திற்கும் சொந்தமில்லை. ஆணையம் டெல்லியில் இயங்கும் ஆணையத்திற்கான உறுப்பினர்களை கர்நாடக அரசு நியமிக்க மறுத்தபோது மத்திய அரசே நியமித்துள்ளது. எனவே நமக்கு தற்போது காவிரியில் 177.25 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் என்றார்.
இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.