எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேனி - தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோரின் ஆணைக்கினங்க காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் போடிநாயக்கனூரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர்கழக செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக செயலாளர்கள் ஆர்.டி.கணேசன், சற்குணம், முன்னாள் நகர்மன்ற தலைவர் பழனிராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் கனல்காந்தி வரவேற்றார். மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம். சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கழக கொள்கைபரப்பு துணை செயலாளரும், கழக செய்தி தொடர்பாளருமான வைகைசெல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வைகை செல்வன் அவர்கள் பேசும்போது, நமது கழகத்தின் பல்வேறு போராட்டத்தின் விளைவாக தான் காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடிந்தது. அதன் வெற்றி விழாவை நாம்தான் கொண்டாட வேண்டும். காவிரி பிரச்னை மட்டுமல்ல, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியது, ஜல்லிக்கட்டு பிரச்னையை தீர்த்தது, ஸ்டெர்லைட் ஆலையை மூடியது, முல்லை பெரியார் அணையில் நீர்தேக்க அளவை 136 அடியிலிருந்து 142 அடியாக சட்டபோராட்டம் நடத்தி உயர்த்தியது, தற்போது 19 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் 1500 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தல் என பல்வேறு திட்டங்களை, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களை கொண்டு வந்தது, செயல்படுத்தியது கழக அரசு மட்டுமே. அதே நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு 280 ஏக்கர் நிலத்தை தாரைவார்த்தது, 1974ல் காவிரி நதிநீர் ஒப்பந்ததை புதுப்பிக்காதது என தமிழகத்திற்கு திமுக பல்வேறு இழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆர்.கே நகர் தேர்தலில் டி.டி.வி தினகரன் ஜெயிக்கவில்லை. 20 ரூபாய் நோட்டு ஜெயித்திருக்கிறது. தற்போது ஆர்.கே நகருக்குள் தினகரன் செல்ல முடியவில்லை. ஏனென்றால் 20 ரூபாய் நோட்டை காட்டி பத்தாயிரம் எங்கே என்று கேட்கின்றனர். ஆர்.கே நகர் தொகுதி மக்களுக்கு தினகரன் கடன்காரனாக இருக்கிறார். அவரை நம்பி போன தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களையும் நீங்கள் அனைவரும் அமைச்சர்கள் என்று கூறி அவர்களின் பிழைப்பை கெடுத்திருக்கிறார்.
ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் சமூக விரோதிகள் ஊடுருவியதே கலவரத்திற்கு காரணம் என்ற உண்மையை ரஜினிகாந்த் சொன்னார். கலவரத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் இழப்பீடும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் தருவதாக கழக அரசு அறிவித்திருக்கிறது. அதிமுக என்பது ஒரு எளிய கட்சி, தொண்டர்களின் கட்சி. இங்கு உண்மையாக உழைப்பவர்களுக்கு உயர்வு நிச்சயம். அதனால் தான் கழகம் சுமார் 28 ஆண்டுகாலமாக தமிழக மக்கள் ஆட்சியில் அமர வைத்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2016 தேர்தலின்போது தனது உடல்நிலையை கருத்தில் கொள்ளாமல் 234 தொகுதிகளுக்கும் சென்று தமிழக மக்களிடம் கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நல்ல திட்டங்களை எடுத்துக்கூறி தனித்து நின்று அமோக வெற்றி பெற்று 32 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியில் இருந்த கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்த சாதனையை செய்தார். அப்படிப்பட்ட தொண்டர்கள் பலமிக்க கட்சியை தினகரனும் அவருடைய குடும்பத்தினரும் ஒன்றும் அசைத்துவிட முடியாது.
தமிழக அரசியல் களத்தில் வெற்றிடம் என்ற மாயையை நம்பி முதியோர் பென்சன் வாங்குகின்ற வயதில் பரட்டையும், சப்பாணியும் கட்சி ஆரம்பித்துள்ளனர். தனது மனைவியிடமே கடன் வைத்துள்ள கமல், ரஜினி மனைவி நடத்திய ஆஸ்ரமம் பள்ளிக்கு வாடகை கொடுக்கவில்லை. இவர்கள் பொதுவாழ்க்கையில் எப்படி நல்லவர்களாக இருப்பார்கள். எத்தனையோ நடிகர்கள் கட்சி ஆரம்பித்தனர். எம்.ஜி.ஆர் அவர்களே எனது வாரிசு என்ற பாக்கியராஜ், நடிகர் சிவாஜி உள்ளிட்டோர் கட்சி ஆரம்பித்தனர். ஆனால் அவர்களால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியவில்லை. மக்களால் போற்றப்பட்ட ம.பொ.சி கூட அரசியலில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மிகப்பெரும் தலைவராக உருவெடுத்தார். அதற்கு காரணம் நடிகராக இருந்ததால் மக்களிடம் அறிமுகம் கிடைத்தது. நல்லவனாக இருந்ததால் முதல்வராக முடிந்தது என அவரே கூறியுள்ளார் என்றார். அரசியலில் சாதித்து காட்டியவர் புரட்சித்தலைவர். அவர் வழி வந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அதை சரியான பாதையில் கொண்டு சென்றதால் நமது கழகம் ஒன்றரை கோடி தொண்டர்களை பெற்றது. இப்படி நமது கழகம் சிறப்பாக செயல்படுவதற்கு காரணம் எளிய தொண்டனையும் சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் பல்வேறு பதவிகளில் அமர்த்தி அழகு பார்ப்பது தான். ஆனால் திமுகவில் மேல்மட்ட தலைவர்கள் ஒவ்வொருவரும் குறுநில மன்னர்களாக உள்ளனர். அவர்களை, அவர்களின் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் பதவிக்கு வந்துவிட முடியாது.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தின் நலனிற்காக பல்வேறு முடிவுகளை உடனடியாக எடுக்க கூடியவர். காவிரியில் தமிழகத்திற்குரிய தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக தயவில் மத்தியில் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த வாஜ்பாயிடம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கோரிக்கை வைத்தார். அதற்கு யோசித்த வாஜ்பாய் அரசை தூக்கி எறிந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவுக்கு பின் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி வருகின்ற ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இருவரும் அமைதியான தலைவர்கள். ஆனால் அவர்களிடம் உரசிப்பார்த்தால் அதன் விளைவுகளை அனுபவிக்கதான் வேண்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இடைவிடாத முயற்சி மற்றும் போராட்டத்தாலும், ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் ஆகியோர் மத்திய அரசிற்கு கொடுத்த அழுத்தத்தாலும் தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுவிட்டது. தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும். காவிரி எந்த மாநிலத்திற்கும் சொந்தமில்லை. ஆணையம் டெல்லியில் இயங்கும் ஆணையத்திற்கான உறுப்பினர்களை கர்நாடக அரசு நியமிக்க மறுத்தபோது மத்திய அரசே நியமித்துள்ளது. எனவே நமக்கு தற்போது காவிரியில் 177.25 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் என்றார்.
இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை நிச்சயமாக கிடைக்கும் : சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15 Jul 2025கடலூர் : தமிழகம் ஓரணியில் இருக்கும் போது டெல்லி அணியின் எந்த காவி திட்டமும் இங்கே பலிக்காது என சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
இன்று நீலகிரி, கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு
15 Jul 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்க
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025 -
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய் : சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
15 Jul 2025நெல்லை : எழுதிக் கொடுத்த வசனத்தை விஜய் வாசித்துவிட்டு செல்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
-
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ: 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்தார்
15 Jul 2025மயிலாடுதுறை, தொடர்ந்து மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார்.
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
15 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப் பட்டுள்ளது.
முன்னிலை...
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது : அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
15 Jul 2025வேலூர் : 'எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது' என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
-
100 கோடி மக்களுக்கு முன்மாதிரி: சுபான்ஷூ சுக்லாவை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி
15 Jul 2025புதுடில்லி : விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பிய இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன் என பிரதமர் மோடி கூறி
-
நிபா வைரஸ் பரவல் எதிரொலி: தமிழக, கேரள எல்லைகளில் அலர்ட்
15 Jul 2025சென்னை, கேரளாவில் நிபா வைரஸ் தொற்றுக்கு 2 பேர் பலியானதையடுத்து நீலகிரி மாவட்ட தமிழக - கேரள எல்லைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
-
உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி: பட்டியலிட்டார் எடப்பாடி பழனிசாமி
15 Jul 2025அரியலூர், விவசாயிகளுடனான சந்திப்பின் போது உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி குறித்து இ.பி.எஸ். பட்டியலிட்டு பேசினார்.
-
அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நடிகை சரோஜாதேவி உடல் நல்லடக்கம்
15 Jul 2025பெங்களூரு, மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல் அவரது சொந்த ஊரில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
பத்திரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா: குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டட்டம்
15 Jul 2025புதுடெல்லி, விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.