எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேட்டூர் : டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது தேசிய நெடுஞ்சாலைக்கு 3005 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. அப்போது விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படவே இல்லையா ? என்று மேட்டூரில் பாசனத்திற்காக அணையை திறந்த பின் நிருபர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி கேள்வி தி.மு.க.வுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை தண்ணீரை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர். திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணையை திறந்த பின் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி: எட்டுவழிச் சாலைக்காக மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் கூறியிருப்பது பற்றி...
பதில்: யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் ஊடக நண்பர்களும், தொலைக்காட்சி நண்பர்களும் ஒரு சில இடத்தில் செய்வதை வைத்து, பெரிதாக பூதாகரமாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இன்றைக்கு கிட்டத்தட்ட 90 சதவீதம் நில அளவுப் பணி நடைபெற்று முடிந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்கள். பசுமைவழிச் சாலைக்கு தேவையான நிலத்தை, நில உரிமையாளர்களிடமிருந்து, எல்லைக்கல் போடப்பட்டுள்ளதாக தகவல் கொடுக்கப்பட்டிருக்கின்றது. நில உரிமையாளர்கள் முன்வந்து, எங்களுக்கு நிலம் எடுப்பதனால் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவிக்கின்றார்கள். ஒருசிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, நில உரிமையாளர்கள் பல்வேறு கட்சியைச் சார்ந்தவர்களாக இருப்பதனால், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களை வைத்து தொலைக்காட்சி படம் எடுப்பது, பத்திரிகையிலே போடுவது, இதற்கென்று ஒரு கூட்டம் இருக்கின்றது. வளர்ச்சிப் பணியை இவர்கள் ஆதரிப்பதே கிடையாது. இந்த அரசை எதிர்க்க வேண்டும், இந்த அரசு கொண்டு வருகின்ற வளர்ச்சிப் பணியை முடக்க வேண்டும் என்பதுதான் அவர்கடைய நோக்கம்.
தி.மு.க. ஆட்சியில் பாதிக்கவில்லையா?
பசுமை வழிச்சாலை திட்டத்தில் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்கள் என்று கேட்கிறார்கள்? அவசரம் இல்லை, அவசரம் என்ற பிரச்சினையே கிடையாது. அந்த நிதியை குறிப்பிட்ட காலத்தில் வாங்கிக் கொள்ளவேண்டும். ஏனென்றால், எல்லா மாநிலங்களும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள், இரண்டாவது திட்டமாக இந்த பசுமை வழிச்சாலை திட்டம் இந்தியாவில் வருகிறது. பல்வேறு மாநிலங்கள் எங்களுக்கு கொடுங்கள், எங்களுக்கு கொடுங்கள் என்று கேட்கிறார்கள். மத்திய அரசை நாங்கள் கேட்டவுடனேயே கொடுத்தார்கள். ஆகவே, அந்த வாய்ப்பை நல்லமுறையிலே பயன்படுத்த வேண்டியது அரசினுடைய கடமை. இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம், மற்ற எதிர்க்கட்சியெல்லாம் சொல்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தில் டி.ஆர்.பாலு தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார்.
3005 ஹெக்டேர் நிலங்கள்...
அப்பொழுது, தமிழகத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலைக்கு 17 சாலைகள் எடுக்கப்பட்டு, கிட்டத்தட்ட 3005 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. அப்பொழுதெல்லாம் விவசாயிகள் பாதிக்கவில்லையா? அப்பொழுது தமிழகத்தினுடைய வாகனங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 7 லட்சம், இன்றைய தினம் 2 கோடியே 57 லட்சம். இந்தத் திட்டம் நிறைவு பெறுவதற்கு இன்னும் ஐந்தாண்டு காலம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலே 14 லட்சம் வாகனங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, 2.57 லட்சம் இருக்கின்றது. ஐந்தாண்டு காலம் நிறைவுபெறுகின்றபொழுது, 70 லட்சம் வாகனங்கள் அதிகரிக்கும். ஆக மொத்தம், 3.27 லட்சம் வாகனங்கள் உயர்ந்து விடும். எனவே, அதற்குத் தேவையான சாலை வசதி தேவை. இவர்களுடைய காலத்தில் சாலை போட்டால், மக்கள் பாதிக்கப்படமாட்டார்களா ? நிலம் எடுத்தால் பாதிக்கப்படமாட்டார்களா ?
60 கிலோ மீட்டர் ...
ஆனால், இன்றைக்கு அம்மாவினுடைய அரசு, மத்தியிலிருந்து போராடி, வாதாடி, நிதி உதவி பெற்று இந்த சாலையை அமைக்கின்றது. இந்த சாலையை அமைப்பதின் மூலமாக சேலத்திலிருந்து சென்னை செல்வதற்கு 60 கிலோ மீட்டர் குறைவாகிறது. பயண நேரம் குறைகிறது. இதனால் தொழில்வளம் பெருகும். இன்னும் பல்வேறு தொழிற்சாலைகள் நம்முடைய பகுதிக்கு கொண்டு வந்து, படித்து, பட்டம் பெற்ற இளைஞர்களுக்கெல்லாம் வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டியது அரசினுடைய கடமை. இப்படிப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால்தான் புதிய, புதிய தொழிற்சாலைகள் வரும். அதற்காகத்தான் இந்தத் திட்டத்தை அம்மாவினுடைய அரசு கொண்டு வந்திருக்கிறது.
கேள்வி: கிட்டத்தட்ட 2.50 கோடி வாகனங்கள் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். அதில் 2 கோடி வாகனங்கள் இரண்டு சக்கர வாகனங்கள் தானே ?
பதில்: தவறு. 2006-ம் ஆண்டிலிருந்து 2010-ம் ஆண்டு வரை உளுந்தூர்பேட்டை, கிருஷ்ணகிரி சாலை என இரண்டு சாலை இருந்தது. அப்பொழுது கனரக வாகனம் 17 லட்சம்தான் இருந்தது. இன்றைய தினம் 23 லட்சம் கனரக வாகனங்கள் உயர்ந்து 40 லட்சமாக உயர்ந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் விபத்துக்கள் அதிகமாவதால், உயிரிழப்புகள் அதிகமாகிறது. இந்த சாலையை பொறுத்தவரைக்கும், நவீன, தொழில்நுட்பத்துடன் கூடிய சாலை. மற்ற சாலையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். விபத்துக்கள் குறைக்கப்படுகிறது. விலை மதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்றுவது அரசின் கடமை.
இழப்பீட்டுத் தொகை...
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சில் நில எடுப்பிற்கான இழப்பீட்டுத் தொகை குறைவாகக் கொடுத்தார்கள். இன்று அம்மாவினுடைய ஆட்சிக் காலத்தில், நிலத்தின் வழிகாட்டு மதிப்பை 66 சதவிகிதம் உயர்த்தி விட்டோம். அதற்குமேல் கூடுதலாகக் கொடுக்கின்றோம். அதுமட்டுமல்ல, அவர்களுடைய நிலங்களிலிருக்கின்ற தென்னை மரங்களின் வயதிற்கு ஏற்றவாறு, சுமார் ரூபாய் 50 ஆயிரம் வரைக்கும் விவசாயிகளுக்கு கிடைக்கின்றது. ஒவ்வொரு விவசாயிக்கும், அவர்கள் பயிரிட்டுள்ள பயிர்களுக்கு, வீடுகளுக்கு, பாசனக் கிணறுகளுக்கு, ஆழ்துளைக் கிணறுகளுக்கு, மாட்டுக் கொட்டகை, தக்க இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்கும். எந்தவகையிலும் நம்முடைய விவசாயப் பெருங்குடி மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் அரசு கண்ணும், கருத்துமாக இருந்து மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அந்த உத்தரவின் அடிப்படையில் கணக்கீடு பணி செய்து, இழப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்கப்படும்.
விவசாயம், பொருளாதார...
அதுமட்டுமல்ல, கால் ஏக்கர், அரை ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களின் நிலம் கையகப்படுத்தும் போது, உடனடியாக அந்தப் பகுதி மக்களுக்கு வீட்டு மனை கொடுத்து, வீடுகளும் கட்டித்தரப்படும். இன்றைக்கு சேலம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அதற்கு பட்டா கொடுத்துள்ளார்கள். அரசைப் பொறுத்தவரைக்கும், மக்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது, அதே நேரத்தில், நம்முடைய தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். விவசாயம், பொருளாதார வளர்ச்சி இரண்டையும் அம்மாவினுடைய அரசு கவனமாக பார்த்துக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 4 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 4 sec ago |
ஆனியன்ப்ரை5 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
பெண்ணை கடத்திய வழக்கு: ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்கியது பெங்களூரு கோர்ட்
13 May 2024பெங்களூரு, பெண்ணை கடத்திய வழக்கில் கர்நாடக எம்.எல்.ஏ ரேவண்ணாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
-
அடுத்த சுற்றில் போபண்ணா ஜோடி
13 May 2024களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
-
வெறுப்புணர்வை தூண்டியதாக புகார்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்
13 May 2024புதுடெல்லி, தேர்தல் பிரசாரத்தின் போது மத வெறு்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக பிரதமர் மோடி மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய
-
பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்குமா டெல்லி அணி? - லக்னோவை இன்று எதிர்கொள்கிறது
13 May 2024புதுடெல்லி : 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் டெல்லி அணி நீடிக்குமா? என்ற நிலையில் இன்று லக்னோ அணியை எதிர்கொள்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2024.
14 May 2024 -
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 May 2024சென்னை : அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
-
அரசு மருத்துவமனையில் செலுத்தும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
14 May 2024சென்னை : மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.&nb
-
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
14 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம்: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
14 May 2024வாஷிங்டன் : ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசும் பெண்களுக்கு அபராதம்: அதிபர் கிம்
14 May 2024பியாங்கியாங் : தங்கள் நாட்டு பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள வடகொரிய அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எ
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
கென்யாவில் வெள்ளம்: 40 டன் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த இந்தியா
14 May 2024புதுடெல்லி : கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கென்யாவுக்கு 40 டன் மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், மீட்பு உபகரணங்கள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட நிவ
-
நேபாள துணை பிரதமர் உபேந்திர யாதவ் ராஜினாமா
14 May 2024காத்மண்டு : நேபாளத்தில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும், துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் போராட்டம்: பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
14 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் போராட்டத்தின் விளைவாக பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
14 May 2024 -
சிங்கப்பூரில் சட்டத்துறை துணை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி பிள்ளை நியமனம்
14 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.
-
மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமல்
14 May 2024சென்னை : சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளது.