முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரின் காவல் நீட்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : அயனாவரம் சிறுமி கற்பழிப்பில் கைதான 17 பேரின் காவலையும் வருகிற 24-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 11 வயது சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டார். மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அந்த குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்களின் நீதிமன்ற காவல் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து சென்னை மகளிர் கோர்ட்டு நீதிபதி மஞ்சுளா முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. கைது செய்யப்பட்ட அனைவரும் சிறையில் இருக்கும் நிலையில் காணொலி காட்சி (வீடியோ கான்பரன்சிங்) மூலம் நீதிபதி விசாரணை நடத்தினார்.விசாரணை முடிவில் 17 பேரின் காவலையும் வருகிற 24-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து