முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆலையில் தமிழக நீதிபதி ஆய்வு செய்ய கூடாதாம் வேதாந்தா குழுமம் எதிர்ப்பு

திங்கட்கிழமை, 20 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

புது டெல்லி,ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேதாந்தா நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

இந்த வழக்கில் ஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்த ஆதாரத்தை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு சமர்பித்தது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி சந்துரு ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

ஆனால் இதற்கு வேதாந்தா நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க கூடாது என வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வேறு மாநிலத்தை சேர்ந்த நீதிபதியை நியமிக்க வேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து