முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளியில் புற்றுநோய்க்கு பரிசோதனை நடத்தும் நாசா ஆராய்ச்சியில் முன்னேற்றம் என தகவல்

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : புற்றுநோய் சிகிச்சைகள் கண்டுபிடிப்பதற்காக சர்வதேச விண்வெளியில் ரத்த செல்களில் பரிசோதனைகளை நாசா நடத்தி வருகிறது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் மைக்ரோ ஆக்டிவிடி சயின்ஸ் குளோவ்பாக்ஸ் விண்வெளி நிலையத்தில் இருந்தபடி விண்வெளி வீரர் செரீனா அவுன் -சான்ஸலர் ஆன்ஜிக்ஸ் ஆகியோர் புற்றுநோய் சிகிச்சை ஆய்வுக்காக ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுகின்றனர்.

நாசாவின் கூற்றுப்படி பூமியில் உள்ள ஒரு உயிரினத்தின் இரத்தத் திசுக்கள் எப்படி செயல்படுமோ அதைப் போலவே கலாச்சார உணவுகளில் உட்செலுத்தப்படும் நுண்ணுயிரிகள் செயல்படுகின்றன. இதனால், சுழலும் செல்கள் பொதுவாக உடலில் இருந்து கொண்டு செயல்படுவது போலவே நடந்து கொள்கின்றன. புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் கீமோதெரபி சிகிச்சைக்கான செல்களை இன்னும் துல்லியமாக பரிசோதிக்க முடியும் என நாசா நம்புகிறது. இந்த சோதனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து