முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் உடல் தகனம் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் நேரில் அஞ்சலி

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் உடல் நேற்று மதுரை தத்தனேரி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.  அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாளின் உடலுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார், விஜயபாஸ்கர், பாலகிருஷ்ணாரெட்டி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள்,தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் (90). கடந்த சில மாதங்களாக அவர் உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களாக அவரது உடல் நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு இருந்தது. ஆனாலும் டாக்டர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் தாயார் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்து மதுரை செல்லூரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறிது நேரத்தில் ஒச்சம்மாள் மரணமடைந்து விட்டார். தாயார் மரணம் அடைந்ததை அறிந்த அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, அவரது மனைவி ஜெயந்தி ராஜூ மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். ஒச்சம்மாள் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

நேற்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று செல்லூர் ராஜூவின் தாயார் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார், விஜயபாஸ்கர், ராஜலட்சுமி ஆகியோரும் ஒச்சம்மாள் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சர் பொன்னையன், எம்.பி.க்கள் பார்த்திபன், ஆர். கோபாலகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் சரவணன், பெரியபுள்ளான், கே. மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம், அண்ணாதுரை, மாவட்ட நிர்வாகிகள் புதூர் துரைபாண்டியன், சி. தங்கம், வில்லாபுரம் ஜெ. ராஜா, எம்.எஸ். பாண்டியன், கிரம்மர் சுரேஷ், சோலை ராஜா, பரவை ராஜா, முத்துராமலிங்கம், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், முன்னாள் மண்டல தலைவர் பெ. சாலைமுத்து, ராஜாங்கம், வி.வி. ஆர். ராஜ் சத்யன், சண்முகவள்ளி, பெ. இந்திராணி, கு. திரவியம், எஸ்.டி. ஜெயபாலன், மானகிரி பா. வெற்றிவேல், பிரிட்டோ, கே.வி.கே. கண்ணன், முத்துகிருஷ்ணன், தாஸ், நல்லுசாமி, ஓ.பி. ரவீந்திரநாத் குமார், பெட்கிராப்ட் சுப்புராம் உள்ளிட்ட ஏராளமானோர் ஒச்சம்மாள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் ஒச்சம்மாள் உடல் மதுரை பாலம் ஸ்டேசன் ரோடு செல்லூர் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தத்தனேரி சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இறதிச் சடங்குகள் நடத்தி ஒச்சம்மாள் உடல் தகனம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து