முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஜனாதிபதி பயணம்

சனிக்கிழமை, 1 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இன்று முதல் 9-ம் தேதி வரை மூன்று கட்டமாக சைப்ரஸ், பல்கேரியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளுக்கு ஒரு வாரம் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தனது பயணத்தின் முதல் நாடாக இன்று முதல் 4-ம் தேதி வரை சைப்ரஸ் நாட்டுக்கு செல்லும் ஜனாதிபதி, அங்கு, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார்.

சைப்ரஸ்ஸை தொடர்ந்து, 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை பல்கேரியா செல்லும் அவர்,  5-ம் தேதி ஆசிரியர் தினத்தன்று அந்நாட்டில் உள்ள சோபியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முன்னிலையில் உரையாற்ற உள்ளார். அதை தொடர்ந்து 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை செக் குடியரசு நாட்டிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பயணம் மேற்கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து