முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் கைது

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

காந்திநகர் : 22 ஆண்டுகளுக்கு முந்தைய போதை மருந்து வழக்கில் முன்னாள் குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை குஜராத் காவல்துறை சி.ஐ.டி. பிரிவு கைது செய்துள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டில் சஞ்சீவ் பட், பனாஸ்காந்தா காவல் நிலையத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தார். அப்போது 1.5 கிலோ போதைப் பொருளை வைத்திருந்ததாக ராஜஸ்தானைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அப்போது பலான்பூரில் உள்ள ஓட்டல் அறையில் இருந்து போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. அதை வழக்கறிஞர் சுமர் சிங் ராஜ்புரோகித் தன் வசம் வைத்திருந்ததாகக் கூறி அவரை பனாஸ்காந்தா காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆனால் ராஜ்புரோகித், ராஜஸ்தானில் உள்ள அவரின் வீட்டில் இருந்து கடத்தப்பட்டதும், போதைப் பொருள் பொட்டலத்தை பனாஸ்காந்தா காவல்துறையே வைத்ததும் பின்பு அம்பலமானது. வழக்கறிஞரை சிக்க வைத்ததாக சஞ்சீவ் பட் உள்ளிட்ட காவல்துறையினர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்க குஜராத் ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து