முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா சட்டசபை கலைப்பு அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் கவர்னருக்கு பரிந்துரைத்தார் சந்திரசேகரராவ்

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்,தேர்தலை முன்கூட்டியே சந்திக்கும் வகையில், தெலுங்கானா சட்டசபையை கலைப்பதற்கான தீர்மானத்தை அமைச்சரவையில் நிறைவேற்றிய முதல்வர் சந்திரசேகர் ராவ் அதை கவர்னருக்கு பரிந்துரை செய்தார்.முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசின் பதவிக்காலம் முடிய இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது, இருந்தாலும், இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தலோடு சேர்த்து தெலுங்கானா மாநிலத் தேர்தலையும் நடத்த சந்திரசேகர் ராவ் திட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து, நேற்று காலை தெலங்கானா அமைச்சரவை முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையில் கூடி ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில், சட்டசபையை கலைக்க பரிந்துரை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின், முதல்வர் சந்திரசேகர் ராவ் அந்த தீர்மானத்தை கவர்னர் நரசிம்மனை சந்தித்து அளித்துள்ளார். தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டதற்கான முறைப்படியான அறிவிப்பை கவர்னர் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து