முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவெடுப்பேன் அழகிரி பேட்டி

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை,அமைதி பேரணி முடிந்த நிலையில் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து விரைவில் முடிவெடுப்பேன் என்று மு.க. அழகிரி தெரிவித்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதுரை வந்த மு.க. அழகிரி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலையை மதுரையில் அமைக்க வேண்டும் என மனு கொடுக்கப்பட்டுள்ளது. அண்ணா பஸ் நிலையம் அருகே ஆவின் பால்பண்ணை சாலை சந்திப்பில் அவரது சிலை வைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்துள்ளோம். சிலை விவரம் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும். அமைதி பேரணி தற்போதுதான் நடந்து முடிந்துள்ளது. எனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து