முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானலில் பேரிஜம் ஏரிக்கு செல்ல காத்திருந்த சுற்றுலா பயணிகள்

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல்- - கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல ஏராளமான சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.
 வார விடுமுறையான நோற்று கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இதில் பேரிஜம் ஏரிக்கு செல்ல அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.
 கொடைக்கானல் பேரிஜம் ஏரி வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரிக்கு செல்ல வேண்டும் எனில் வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும். ஒரு சிறுரக வாகனத்திற்கு 200ம் வேன் போன்ற பெரிய வாகனத்திற்கு 300 ரூபாயும் கட்டணம் செலுத்தி வனத்துறை வழங்கக் கூடிய அனுமதி ரசீதை மோயர் பாய்ன்ட் என்ற இடத்தில் கொடுத்து பின்னர்தான் பேரிஜம் ஏரிக்கு செல்ல முடியும் இந்த பகுதியில்தான் தொப்பி தூக்கும் பாறை, அமைதிப் பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரியின் அப்பர் லேக் வியூ, பேரிஜம் ஏரி ஆகிய பகுதிகளை பார்க்க முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து