முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்மலா தேவி உட்பட 3 பேர் மீதான வழக்கு திருவில்லிபுத்தூருக்கு மாற்றம்

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை : நிர்மலா தேவி உட்பட 3 பேர் மீதான வழக்கு விருதுநகர் நீதிமன்றத்தில் இருந்து திருவில்லிபுத்தூருக்கு மாற்றப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு உதவி பெறும் தனியார் கலைக் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணி புரிந்தவர் நிர்மலா தேவி. இவர், தன்னிடம் படித்த மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைக் கழக உதவி பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை போலீஸார் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

நிர்மலா தேவி உள்பட மூன்று பேரின் வழக்கை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு விருதுநகர் நீதிமன்றத்தில் இருந்து திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

நிர்மலாதேவி உள்பட 3 பேரும் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானதை தொடர்ந்து நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து