முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கழுத்தில் கத்தியை வைத்து பேச்சுக்கு அழைக்க முடியாது: அமெரிக்காவிடம் சீனா கண்டிப்பு

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : கழுத்தில் கத்தியை வைப்பது போல் கடுமையான வரிவிதிப்புகளை அறிவித்துவிட்டு அமெரிக்கா எங்களை வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியாது என்று சீனா கண்டிப்பாகத் தெரிவித்துள்ளது.

20,000 கோடி டாலர் மதிப்பிலான (சுமார் ரூ.14.52 லட்சம் கோடி) சீனப் பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி அமலுக்கு வந்த நிலையில், சீன வர்த்தகத் துறை இணையமைச்சர் வாங் ஷோவென் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தலைநகர் பெய்ஜிங்கில்  கூறியதாவது:

இரு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமென்றால், அந்த நாடுகள் ஒன்றையொன்று சம அளவில் மதிக்க வேண்டும்.

ஆனால், அமெரிக்காவைப் பொருத்தவரை கடுமையான வரி விதிப்புகள் மூலம் சீனப் பொருள்கள் மீது அந்த நாடு மிகப் பெரிய அளவில் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இது, எங்கள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுவது போல் உள்ளது. இத்தகைய சூழலில், எங்களால் எப்படி அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும்?

எங்களை அமெரிக்க நிதியமைச்சர் ஸ்டீவன் நுச்சின் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். ஆனால் இப்போதுள்ள சூழலில், எங்களால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து