முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இம்ரான் கானின் 3-வது மனைவி கர்ப்பம் ஊடக செய்திகளுக்கு பாக். அரசு மறுப்பு

வியாழக்கிழமை, 4 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் மூன்றாவது மனைவி புஷ்ரா மேனகா கர்ப்பமாக இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட தகவலை அரசு மறுத்துள்ளது.

உருது நாளிதழான டெய்லி உம்மத், இம்ரான் கானின் மனைவி புஷ்ரா மேனகா கர்ப்பமாக இருப்பதாகச் செய்தி வெளியிட்டது. அத்துடன் இம்ரான் கான் இந்த செய்தியை ரகசியமாக வைத்திருப்பதாகவும் நேரம் வரும் போது அறிவிக்க உள்ளதாகவும் கூறியிருந்தது. அதே போல பாகிஸ்தான் டுடே செய்தி நிறுவனமும் இம்ரான் கானுக்குக் குழந்தை பிறக்க உள்ளதாகச் செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இதை இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் இப்டிகார் துரானி, போலியான செய்தி என்று மறுத்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தில், ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவது மற்றும் பகிர்வது தவறான நடவடிக்கை. இது பத்திரிகை நெறிமுறைகளை மீறும் செயல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து