முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காதலனின் கல்லறையில் மணப்பெண் கோலத்தில் அழுது புரண்ட பெண்

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

இண்டியானா போலிஸ் : ஜெசிகா என்ற இளம்பெண் தீயணைப்பு வீரரான கெண்டல் மர்பி என்ற இளைஞரை உயிருக்குயிராக விரும்பினார். இதையடுத்து செப்டம்பர் 29-ம் தேதியன்று இருவருக்கும் திருமணம் என நிச்சயமானது. திருமணத்துக்கு 10 மாதம் இருந்தாலும் கல்யாண ஏற்பாடுகள் நடைபெற துவங்கின. இந்த நிலையில் நவம்பர் மாதம் மதுபோதையில் இருந்த கெண்டல் மர்பி சாலை விபத்தில் உயிரிழந்தார்.

பெற்றோரும் உறவினர்களும், நண்பர்களும் எல்லாருமே எவ்வளவோ சொல்லி பார்த்தும் காதலனின் நினைவில் இருந்து ஜெசிகாவால் மீளவே முடியவில்லை. இப்படியே நாட்களும் கடந்து சென்று விட்டன.  இந்த நிலையில் திருமணம் நிச்சயக்கப்பட்ட நாளான செப்டம்பர் 29-ம் தேதியன்று அதிகாலையிலேயே எழுந்த ஜெசிகா  கல்யாணத்துக்காக வாங்கி வைத்திருந்த மணப்பெண் உடையை அணிந்து கொண்டு புதுப் பெண்ணுக்கான அலங்காரங்களையும் செய்து கொண்டு மணப்பெண்ணாகவே மாறி விட்டார். நண்பர்கள், உறவினர்களை அழைத்து கொண்டு, நேராக கெண்டலின் கல்லறைக்கு சென்று மணப்பெண் கோலத்தில் இருந்த ஜெசிகா அந்த கல்லறையில் புரண்டு புரண்டு அழுதார். உடனிருந்தவர்கள் எல்லோருமே ஜெசிகாவின் செயலால் அதிர்ச்சியுடன் கண்ணீரையும் சிந்தினார்கள். கல்லறையை சுற்றி சுற்றி வந்து ஜெசிகா புகைப்படங்கள் எடுத்து கொண்டார். தி லவ்விங் லைப் போடோகிராபி என்ற புகைப்பட நிறுவனம், கெண்டல் உயிருடன் இருந்திருந்தால் இருவருக்கும் எப்படி திருமணம் நடந்திருக்குமோ அவ்வாறே புகைப்படங்களை எடுத்தது. இதை கடந்த 5-ம் தேதி தன் பேஸ்புக் பக்கத்திலும் அந்த நிறுவனம் பதிவிட்டது. காதலன் இறந்து 10 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், கல்யாணத்துக்கு நாள் குறித்த அன்றைய தினத்தில் மணப்பெண் கோலத்தில் ஜெசிகா அழுதது அங்கிருந்த கல்லறை தோட்டத்தையே அதிர வைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து