முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலி என்கவுன்ட்டர் வழக்கில் தீர்ப்பு: அஸ்ஸாம் மாநில முதல்வர் சோனோவால் வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

கவுகாத்தி : அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த போலி என்கவுன்ட்டர் வழக்கில் ராணுவத்தினர் 7 பேருக்கு ராணுவ நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்புக்கு மாநில முதல்வர் சர்வானந்த சோனோவால் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர்  கூறியதாவது:

இந்த வரவேற்கத்தக்க தீர்ப்பு, நீதித்துறை மற்றும் ராணுவத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலும், அவர்கள் பொறுப்புடனும், நியாயமாகவும் நடப்பதை உறுதி செய்வதாகவும் உள்ளது. போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட அப்பாவி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் குடும்பத்தினர் நீதிக்காக நீண்டகாலம் காத்திருந்த நிலையில், இத்தீர்ப்பு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. மனித உரிமைகளை இந்திய ஜனநாயகம் மதிப்பதை இத்தீர்ப்பு பிரதிபலித்துள்ளது. ராணுவ நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை உயர்நிலை அதிகாரிகள் உறுதி செய்வார்கள் என்று நம்புகிறேன் என்று சர்வானந்த சோனோவால் கூறினார்.

ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் சங்கத் தலைவர் திபங்கா குமார் நாத் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து