முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை மர்ம குண்டு வெடித்ததில் 5 பொதுமக்கள் பலி

ஞாயிற்றுக்கிழமை, 21 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு,காஷ்மீரில் 6 மணி நேரமாக தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் அப்பகுதியில் மர்ம வெடிகுண்டு ஒன்று வெடித்ததில் 5 பொதுமக்கள் பலியாகி உள்ளனர்.

நேற்று காலையில் இருந்து மதியம் வரை காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில ஷோபியன், புல்வாமா, பார்திபோரா, மற்றும் கனவ்போரா ஆகிய பகுதிகளில் இந்திய ராணுவம் தீவிரவாதிகள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை குல்ஹாம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடியாக ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து ராணுவத்துக்கும், தீவிரவாதிக்கும் இடையில் துப்பாக்கி சூடு 6மணி நேரம் நடந்தது.

இந்த கடும் துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் பலியாகி உள்ளார். ஆனால் துப்பாக்கி சூடு முடிந்த சில நிமிடத்தில் மக்கள் அங்கு கூடி இருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து மறைத்து வைத்திருந்த குண்டுகள் வெடித்தது. இந்த குண்டுகள் வெடித்ததில் 5 பொதுமக்கள் பலியானார்கள். இது மிகவும் வித்தியாசமான மர்ம குண்டு என்று கூறப்படுகிறது. இதில் மொத்தம் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இனி வரும் சமயங்களில் துப்பாக்கி சூடு நடந்தால் உடனே அந்த பகுதிக்கு மக்கள் வர கூடாது என்று ராணுவம் அறிவுறுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து