முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெண்டர் விவகாரம்: சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சுப்ரீம் கோர்ட்டில் ' அப்பீல்

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டதை ரத்து செய்யக்கோரி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளது.

தி.மு.க. வழக்கு:தமிழக நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் ரூ. 4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.

ஐகோர்ட் உத்தரவு:இந்த நிலையில் மனுதாரர் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் முதல்வர் கையில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை இதனை முறையாக விசாரித்து இருக்காது என்று கூறப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும் 3 மாதங்களுக்குள் ஆரம்ப கட்ட விசாரணையை சி.பி.ஐ. முடிக்க வேண்டும். என்றும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டு இருந்தார். மேலும் ஒரு வாரத்தில் சி.பி.ஐ.யிடம் ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறை ஒப்படைக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

ஏற்புடையதல்ல...இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று அப்பீல் செய்தது. அந்த மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, டெண்டர் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது ஏற்புடையதல்ல. இதனால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து