முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2020 ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு பி.எஸ் -4 ரக வாகனங்களை விற்பனை செய்யக் கூடாது - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 24 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : வரும் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு பாரத் ஸ்டேஜ் (பி.எஸ்-4) வாகனங்களை விற்பனை செய்யவோ, பதிவு செய்யவோ கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மாசுக் கட்டுப்பாட்டுத் தர நிர்ணயத்துக்கான கொள்கையான பி.எஸ். - 4-ன் விதிகள் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வந்தது. அடுத்ததாக பி.எஸ்.-5 விதிகளை 2020 ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளது. எனவே, மாசுக் கட்டுப்பாட்டுத் தர நிர்ணயத்தின் பழைய விதிகளின்படி தயாரிக்கப்பட்ட வாகனங்களை குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு விற்பனை செய்யக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, பி.எஸ்.-4 விதிகளின்படி 2020 மாா்ச் 31-ம் தேதி வரை வாகனங்களைத் தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அவ்வாறு தயாரிக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கோரப்பட்டது. மத்திய அரசு தரப்பும் இதற்கு ஆதரவாகவே இருந்தது. பி.எஸ்.-4 விதிகளின்படி தயாரிக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்ய 2020 ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு 3 முதல் 6 மாதங்கள் வரை வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு கால அவகாசம் அளிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் இந்த வழக்கில் காற்று மாசுபாடு பிரச்சினை தொடா்பாக நீதிமன்றத்துக்கு ஆலோசனை வழங்குவதற்காக வந்த வழக்கறிஞர் அபராஜித் சிங் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மதன் பி.லோக்குா் தலைமையிலான 3 நீதிபதிகள் அமா்வு இந்த வழக்கில் நேற்று தீா்ப்பளித்தது. அதில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது. இதற்காக மாசுக் கட்டுப்பாட்டு தர நிா்ணய கொள்கையை உறுதியாக பின்பற்ற வேண்டும். எனவே, 2020 ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு பி.எஸ்.-4 வாகனங்களை விற்பனை செய்யக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தனா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து