முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை மேலும் ஒரு வழக்கில் தண்டனை

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

டாக்கா,வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு மற்றொரு வழக்கு ஒன்றில் 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கலிதா ஜியா பிரதமராக ஆட்சியில் இருந்த போது அவரது கணவர் பெயரால் இயங்கி வரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பல லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கலிதா ஜியா நிதி மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தனது கணவரின் பெயரிலான அறக்கட்டளைக்கு நிதி சேர்த்ததாக கலிதா ஜியா மீது டாக்கா நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இது தொடர்பாக அரசியல் செயலாளராக இருந்த ஹாரிஸ் சவுத்தரி, ஹாரிஸ் சவுத்ரியின் தனிஉதவியாளர் ஜியாவுல் இஸ்லாம் முன்னா, டாக்கா நகர முன்னாள் மேயர் சாதிக் உசேன் கோக்கா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்துமே நிரூபிக்கப்பட்டன.இதையடுத்து, இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, கலிதா ஜியா மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். வங்க தேச ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச தண்டனை இதுதான் என்று கூறப்படுகிறது,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து