முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது பா.ஜ.க.: ஒடிஸா முதல்வர் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 3 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புவனேஷ்வர் : ஒடிஸா மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிப்பதாகக் கடந்த மக்களவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை மத்திய பாஜக அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது என்று ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒடிஸாவில், ஆளும் பிஜு ஜனதா தளம் சார்பில்  நடைபெற்ற மக்கள் தொடர்பு நடைபயணம் நிகழ்ச்சியில், மாநில முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் பேசியதாவது:

கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, ஒடிஸா மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்பதே பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில் முதலாவதாக இருந்தது. அதனைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

ஆனால், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும், பா.ஜ.க. தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மக்களின் நீண்ட நாள் நம்பிக்கை தொடர்ந்து நம்பிக்கையாகவே இருந்து வருகிறது. மக்களின் நம்பிக்கைகளை நிறைவேற்ற பாஜக தலைமையிலான மத்திய அரசு தவறிவிட்டது.

ஆண்டுதோறும், புயல் மற்றும் வெள்ளம் காரணமாக ஒடிஸா மாநிலம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. அவற்றின் காரணமாக, மாநிலம் பெரும் இழப்புகளையும் சந்தித்து வருகிறது. எனவே தான், மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து கோரி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து