எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,‘கஜா’ புயலை சமாளிக்க அரசு தயார் நிலையில் உள்ளது. அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
‘கஜா’ புயலினை எதிர்கொள்ள மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–
கஜா புயலானது, மேற்கு மத்திய, கிழக்கு மத்திய மற்றும் தென் வங்கக்கடலில் உருவாகி, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் மேற்கு திசையில் நகர்ந்து சென்னைக்கு கிழக்கு திசையில் 750 கி.மீ. தொலைவில் நாகப்பட்டினத்திற்கு கிழக்கு வடகிழக்கு திசையில் 840 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இப்புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து, மேலும் தீவிரம் அடைந்து தீவிர புயலாக மாறும். மேலும் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக தீவிரம் குறைந்து தமிழக கடற்கரை பகுதிகளான கடலூர் மற்றும் பாம்பன் இடையே 15.11.2018 அன்று முற்பகல் புயலாக கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்தமிழகத்தின் ஆங்காங்கே 15–ந்தேதி அன்று தீவிர கனமழை பெய்ய கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கஜா புயல் ஏற்கனவே 3 முறை திசை மாறி உள்ளது. காற்றின் திசையானது மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வடதமிழக கடலோர பகுதிகளில் 14–ந்தேதி காலை முதல் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.முதலமைச்சரின் ஆணைப்படி கடலோர மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு இன்று மாலைக்குள் சென்று ஆயத்த பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தலைமைச் செயலாளர் அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் மத்திய படை அலுவலர்களுடன் கஜா புயலினை எதிர்கொள்ள மேற்கொள்ளபட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
கூடுதல் தலைமைச் செயலர், வருவாய் நிருவாக ஆணையர் நேற்று கடலோர மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் கஜா புயலினை எதிர்கொள்ள மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.‘புயல் மேலாண்மை’ குறித்த நடவடிக்கை பட்டியலின்படி மாவட்ட நிர்வாகங்கள் முன்னேற்பாடுகள் மேற்கொண்டு வருகின்றன.இதுவரையில் கடலோர மாவட்டங்களில் 2559 பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.410 பல்துறை அலுவலர்களை கொண்ட மண்டல குழுக்கள் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.முதல்நிலை மீட்பாளர்கள் (7158 பெண்கள் உட்பட) 22495 தயார் நிலையில் உள்ளனர்.கூடுதல் தலைமைச் செயலர்–வருவாய் நிருவாக ஆணையரின் ஆணைப்படி, தலா ஒரு குழுவிற்கு 25 நபர்கள் வீதம் சென்னை – 1, கடலூர் – 1, ராமநாதபுரம் – 1, சிதம்பரம் – 2, நாகப்பட்டினம் – 3 என 8 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் (NDRF) அனுப்பப்பட்டுள்ளன.அதே போல், சென்னை – 1, கடலூர் – 1, நாகப்பட்டினம் – 2 என 4 மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் (TNDRF) அனுப்பப்பட்டுள்ளன.தேடுதல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடும் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தயார் நிலையில் உள்ளன.ஸ்ரீ சத்யசாய் சேவா மையம், இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பேரிடர் காலங்களில் தேடுதல், மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபடும் வகையில் உருவாக்கப்பட்ட பேரிடர் உதவி படை (Disaster Response Guards) தயார் நிலையில் உள்ளன.
அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் முழுஅளவில் தண்ணீர் நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.மருத்துவமனைகளின் கீழ் தளத்திலுள்ள ஜெனரேட்டர்களை உயர் மட்ட அளவில் பொருத்திடவும், போதிய ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இருப்பில் வைக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.அத்தியாவசிய மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளன.மரம் அறுக்கும் யந்திரங்கள், ஜே.சி.பி, ஜெனரேட்டர்கள் ஆகியன தயார் நிலையில் உள்ளன. மின்சார துறை ஊழியர்கள் கீழே விழும் கம்பங்கள், ஓயர்கள் மற்றும் மின்மாற்றிகள் அகற்றிட தயார் நிலையில் உள்ளனர்.புயல் கரையை கடந்த பின்பு, சுகாதார பணியாளர்கள் சாலைகளில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்றிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு போதிய படகுகள் தயார் நிலையில் உள்ளன.மக்கள் கடலில் குளிக்கவோ மற்ற பொழுது போக்கு செயல்களில் ஈடுபடவோ கூடாது என மாவட்ட நிர்வாகங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்திய வானிலை ஆய்வு மையம் அளிக்கும் எச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் கடலோர மக்களுக்கு தெரிவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடற்கரையிலிருந்து 25 மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகள் புயலால் பாதிக்கப்படும் இடமாக கருதி தக்க நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கப்பட்டுள்ளன. புயல் அடித்து ஓய்ந்த பிறகு பாதிப்புகள் ஏற்படும் இடங்களில் பணிகள் மேற்கொள்ள உடனடியாக ஜேசிபி, ஜெனரேட்டர், மின்சாரத் துறை ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். புயல் சம்பந்தமாக மக்கள் தவறான வதந்திகளை நம்பி, எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம்.மேலும் 24 மணி நேரமும் வானிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் புயல் தடுப்பு கட்டுப்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மாநில அவசர கட்டுப்பாடு மையமும் தகவல்களை உ டனுக்குடன் அறிவிக்க தயார் நிலையில் உள்ளன.1618 ஜேசிபி யந்திரங்கள், 1454 மரம் அறுக்கும் யந்திரங்கள், 1032 படகுகள், 1442 ஜெனரேட்டர்கள், 1463 தண்ணீர் பம்ப் செட்டுகள், 1125 நீச்சல் வீரர்கள், 1557 பாம்பு பிடிக்கும் வீரர்கள், 236 மருத்துவ குழுவினர், 368 நடமாடும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.இப்பேட்டியின்போது, கூடுதல் தலைமைச் செயலர், வருவாய் நிருவாக ஆணையர் கொ.சத்யகோபால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் டாக்டர் அதுல்ய மிடுரா, மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 18 hours ago |
ஆனியன்ப்ரை5 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
உடல் நலக்குறைவால் நாகை எம்.பி. காலமானார்
13 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்.