எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம்,சேலம் மாவட்டம் மேச்சேரியில் நடைபெற்ற விழாவில் ரூபாய் 2 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை 825 பயனாளிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மேலும், ரூ.158 கோடி மதிப்பில் மேச்சேரி-நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.சேலம் மாவட்டம், மேச்சேரியில், ரூ. 158 கோடியில் மேச்சேரி - நங்கவள்ளி கூட்டுக் குடிநீர் திட்ட திறப்பு விழா நடைபெற்றது.
இத்திட்டத்தை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மேச்சேரி-நங்கவள்ளி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 67 குடியிருப்புகளும், மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் 338 குடியிருப்புகளும், மேச்சேரி, பி.என்.பட்டி மற்றும் வீரக்கல்புதூர் ஆகிய மூன்று பேரூராட்சிகளிலும் என மொத்தம் 405 குடியிருப்புகளுக்கு தடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இருசக்கர மானியம்...ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 60 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கும், தூய்மை பார்வை இயக்கத்தின் சார்பில் 90 பயனாளிகளுக்கு தனி நபர் இல்ல கழிப்பறைகள் கட்டுவதற்கும் என மொத்தம் 150 பயனாளிகளுக்கு ரூபாய் 1,15,80,000 மானியத் தொகையும், மகளிர் திட்டம் சார்பில் 14 மகளிர் சுயஉதவிக் குழுவும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோருக்கு பாதுகாப்பு நிதி உதவியும், ஒரு மகளிருக்கு அம்மா இருசக்கர வாகன மானியம் என 151 பயனாளிகளுக்கு ரூபாய் 3,75,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மானியத் தொகை...வருவாய்த் துறையின் சார்பில் 394 பயனாளிகளுக்கு ரூபாய் 19,79,600 மதிப்பீட்டில் கல்வி உதவித் தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை மற்றும் இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் நிலவரித் திட்டப் பட்டா உள்ளிட்டோர்களுக்கும், வேளாண்மைத் துறை சார்பில் 25 விவசாயிகளுக்கு ரூபாய் 2,46,800 மதிப்பீட்டில் தெளிப்பு நீர் பாசனக் கருவி, மழைத்தூவான் கருவி, விதைகள் மற்றும் வேளாண் கருவிகள், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்கள் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் அமைப்பதற்கு ரூபாய் 15 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
20 விவசாயிகளுக்கு...தோட்டக்கலைத் துறையின் சார்பில் 20 விவசாயிகளுக்கு ரூ.18,10,200 மதிப்பீட்டில் சொட்டு நீர் பாசன நிலப் போர்வை, தெளி நீர் பாசனம், பசுமைக் குடில், வெங்காய சேமிப்புக் கிடங்கு அமைப்பதற்கான மானியம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் ரூ.ஒரு லட்சம் மதிப்பீட்டில் 10 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரம், 10 பயனாளிகளுக்கு விலையில்லா சலவைப் பெட்டிகள், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் சுயநிதித் திட்ட 1 பயனாளிக்கு ரூபாய் 95 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.2 கோடியே 15 லட்சம்...பொதுச் சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையின் சார்பில் மாணவர்களுக்கு ரூபாய் 2 ஆயிரம் மதிப்பீட்டில் கணிப்பொறி, கூட்டுறவுத் துறையின் சார்பில் 50 நபர்களுக்கு ரூபாய் 37,90,000 மதிப்பீட்டில் மாநில கடனுதவி மற்றும் பயிர்க் கடனுதவி, ஆதி திராவிடர் நலத் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூபாய் 20 ஆயிரம் மதிப்பீட்டிலான இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூபாய் 25,000 சுயஉதவி தொடங்குவதற்கான வங்கிக் கடன் மானியம் என மொத்தம் 825 பயனாளிகளுக்கு ரூபாய் 2,15,21,800 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 12 hours ago |
ஆனியன்ப்ரை5 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி எதுவும் அளிக்கவில்லை : கவர்னர் விளக்கம்
13 May 2024சென்னை : அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிய அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் கஞ்சா வணிகத்தை தடுக்க நேர்மையாக செயல்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
13 May 2024சென்னை, கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.