முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் தாக்குதலில் பொது மக்கள் 7 பேர் பலி

சனிக்கிழமை, 15 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு : ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

புல்வாமா மாவட்டத்தில் உள்ள சிமூ கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்பு படையினருக்கு நேர்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிமூ கிராமத்தில் பாதுகாப்புபடையினர் தேடுதக் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு வீடாகப் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இருதரப்பும் இடையே நீண்டநேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 3 தீவிரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், துப்பாக்கிச் சண்டையில் பொதுமக்கள் 7 பேர் பலியாகினர். பலர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பலியானவர்களில் எம்.பி.ஏ. பட்டதாரி அபித் ஹுசனும் ஒருவர். ஒரு மாததுக்கு முன்னர் இந்தோனேசியாவிலிருந்து தனது மனைவி மற்றும் ஒருமாத குழந்தையுடன் காஷ்மீர் வந்திருக்கிறார். பாதுகாப்புப் படையின் இந்தத் தாக்குதலுக்கு மெகபூபா முஃப்தி மற்றும் ஃபருக் அப்துல்லா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து