முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் அகிலேஷ்- மாயாவதி கூட்டணி குறித்து இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு;

வெள்ளிக்கிழமை, 11 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ : உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக வரும் பாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன்சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளன. கூட்டணியை உறுதி செய்துள்ள அக்கட்சிகள் இன்று  முறைப்படி இதனை அறிவிக்கவுள்ளன.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக நாடுமுழுவதும் வலிமையான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்கு முன்னோட்டமாக, உத்தரபிரதேசத்தில் எதிரும் புதிருமாக இருந்த பகுஜன் சமாஜும், சமாஜ்வாடியும் மக்களவை தேர்தலுக்காக கைகோத்துள்ளன.

உத்தர பிரதேசத்தில் கடந்த மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 80 இடங்களில் பா.ஜ.க. கூட்டணி 73 இடங்களில் வென்று பெரும் சாதனை படைத்தது. எனவே வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டுமென்றால் வலிமையான கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்காக சிறு சிறு கட்சிகளையும் தங்கள் அணியில் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்தக் கூட்டணியில், அஜீத் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம்(ஆர்எல்டி) சேர்வது உறுதியாகியுள்ளது. தற்போது, உத்தரபிரதேச மாநில அமைச்சராக இருக்கும் சுஹல் தேவ், பாரதிய சமாஜ் கட்சியின் (எஸ்பிஎஸ்பி) தலைவர் ஓம் பிர காஷ் ராஜ்பர் ஆகியோர் பாஜக கூட்டணியில் இருந்து விலகி சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணியில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சோனியா காந்தியின் ரேபரேலி மற்றும் ராகுல் காந்தியின் அமேதி ஆகிய 2 தொகுதி களை மட்டும் காங்கிரஸுக்கு ஒதுக்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க காங்கிரஸ் தயாராக இருக்குமா என தெரியவில்லை. எனினும் தங்கள் கூட்டணியை இறுதி செய்து நாளை அறிவிக்க சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதற்காக சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் லக்னோவில் இன்று  கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்திக்கவுள்ளனர். அப்போது கூட்டணியை முறைப்படி அறிவிக்கவுள்ளனர். கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரமும் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா 37 தொகுதிகளில் போட்டியிடும் எனத் தெரிகிறது. காங்கிரஸ் உட்பட மற்ற கட்சிகளுக்கு 6 தொகுதிகளை பிரித்து தர முடிவு செய்துள்ளன. தொகுதி உடன்பாட்டை காங்கிரஸ் ஏற்கவில்லை என்றால், அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் மட்டும் கூட்டணி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தாமல் 78 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த அகிலேஷ் யாதவும், மாயாவதியும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து