முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு தி.மு.க.வை மோடி அழைக்கவில்லை: தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி

வெள்ளிக்கிழமை, 11 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைப்பதற்கு தி.மு.க.வுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுக்கவில்லை என தமிழக பா.ஜ..க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

மீண்டும் அழைப்பு...

தமிழகத்தில் வாஜ்பாய் காட்டிய வழியில் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் என்றும், பழைய நண்பர்களையும் இணைத்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதனால் கடந்த காலங்களில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகளுக்கு மீண்டும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

கூட்டணி இல்லை...

இந்த அழைப்பை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நிராகரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பா.ஜ.க.வுடன் ஒருபோதும் தி.மு.க. கூட்டணி வைக்காது என்றும், பிரதமர் மோடி, வாஜ்பாயும் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழிசை கேள்வி...

மு.க.ஸ்டாலின் அறிவிப்பு பற்றி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த தமிழிசை சவுந்தரராஜன், ‘கூட்டணிக்கு தி.மு.க.வை பிரதமர் மோடி அழைக்கவில்லை’ என்றார். “தமிழகத்தில் கூட்டணி கதவு திறந்திருக்கிறது என்று மோடி கூறியது தி.மு.க.வுக்கு அல்ல. வாஜ்பாய் பாணியில் கூட்டணி என்பதை தி.மு.க.வுக்கு விடுத்த அழைப்பாக ஸ்டாலின் ஏன் எடுத்துக்கொண்டார் ?” என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து