முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீட்டிலேயே முடங்கி கிடக்கும் பாண்டியா - தந்தை ஹிமான்ஷு வருத்தம்

புதன்கிழமை, 16 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

காந்திநகர் : காப் வித் கரண் நிகழ்ச்சியில் வாய்க்கு வந்த படி உளறி மாட்டிக் கொண்ட ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான அடிலெய்ட் போட்டியை வீட்டில் அமர்ந்த படி தொலைக்காட்சியில் பார்த்தார் என்று அவரது தந்தை ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்தார்.

காப் வித் கரண் நிகழ்ச்சி சர்ச்சைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுலுக்கு என்ன அபராதம் என்பதை பி.சி.சி.ஐ. பரிசீலித்து வருகிறது. இப்போதைக்கு இடைக்காலத் தடை உள்ளது. இந்நிலையில் மிட் டே பத்திரிகையில் ஹர்திக் பாண்டியா தந்தை ஹிமான்ஷு கூறும் போது,

ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய பிறகு பாண்டியா வீட்டில்தான் இருக்கிறார். வெளியில் எங்கும் செல்வதில்லை. மேட்சை வீட்டில் அமர்ந்துதான் பார்த்தார். எந்த ஒரு போன் கால்களையும் அவர் எடுப்பதில்லை. அவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். குஜராத்தில் பொது விடுமுறை. ஹர்திக் பாண்டியா எப்போதும் பட்டம் விடுவார். ஆனால் இந்த முறை அதையும் தவிர்த்து விட்டார். இந்த முறை அவர் இதற்கெல்லாம் செல்லவில்லை. காரணம் நிலைமை சரியில்லை. எந்த விழாவையும் கொண்டாடும் மன நிலையில் அவர் இல்லை. சர்ச்சையினால் மிகவும் ஏமாற்றத்துடன் இருக்கிறார். நாங்கள் வீட்டில் இது பற்றி எதுவும் விவாதிப்பதில்லை. சகோதரர் குருணால் கூட ஹர்திக்கிடம் இது குறித்து எதுவும் பேசவில்லை. பி.சி.சி.ஐ. முடிவுக்காகக் காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து