முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு பேருந்து நிலையத்தில் கையெறி குண்டு வீசி தாக்குதல்: 18 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

வியாழக்கிழமை, 7 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

ஜம்மு : ஜம்முவில் உள்ள பேருந்து நிலையத்தில் கையெறி குண்டுகளை வீசி அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த 18 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப் படை பயங்கரவாத முகாம்களில் மீது தாக்குதல் நடத்தியது. அவ்வப்போது எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் மறுபடியும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. அதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

18 பேர் காயம்

இந்நிலையில், ஜம்முவில் உள்ள பேருந்து நிலையத்தை குறி வைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 18 பேர் காயம் அடைந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்து விரைந்து சென்ற பாதுகாப்புப் படையினர் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். குண்டுவெடித்த பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வைரலாகும் வீடியோ

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள காவல்துறையினர், கையெறி குண்டுகளை வீசி பேருந்து நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜம்முவில் நடந்த அசம்பாவிதம் குறித்த முதற்கட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து