முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலாவியில் கரைபுரண்டு ஓடிய காட்டு வெள்ளம்: 23 பேர் பலி

சனிக்கிழமை, 9 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

பிளாண்டயர் : தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் காட்டுவெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலியாகியுள்ளதாக உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடும் மழையினால் ஏற்பட்ட காட்டு வெள்ளம் கட்டுக்கடங்காமல் ஊர்ப்பகுதிகளுக்குள் புகுந்துள்ளதால் 11 பேர் காணாமல் போய் விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மலாவி நாட்டில் தற்போதைய எண்ணிக்கையின்படி ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர்கள் பாதிப்புக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

நாட்டின் தென் பகுதியில் உள்ள பன்னிரெண்டு மாவட்டங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நாட்டின் கணிசமான பகுதிகளில் பெரும்சேதாரங்கள் ஏற்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கும் மக்களை மீட்கவும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யவும் மலாவி பாதுகாப்புப் படையும் காவல் தேடுதல் மற்றும் மீட்புக்குழுக்களும் மலாவி செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து மும்முரமாக பணியாற்றி வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து