எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சூதாட்ட புகாரில் சென்னை அணிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து டோனி மனம் திறந்து பேசியுள்ளார்.
ரசிகர்கள் வருத்தம்
சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2016, 2017 ஆகிய இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டதால் அதனுடைய ஆயிரக்கணக்கான ரசிகர்களை வருத்தம் அடைந்தனர். இரண்டு ஆண்டுகள் தங்களுடைய மஞ்சள் நிறைய ஆடை அணிந்த வீரர்களை பார்க்க முடியாமல் அவர்கள் ஏங்கிப் போனார்கள்.
எதிர்பார்ப்பு...
புனே, குஜராத் அணிகளில் தங்கள் வீரர்கள் விளையாடினாலும் ரசிகர்கள் திருப்தி அடையவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் கடந்த ஆண்டு களத்தில் இறங்கிய சிஎஸ்கே அணி, அதிரடியாக விளையாடி கோப்பையை கைப்பற்றியது. இத்தகைய நிலையில், இந்த ஆண்டும் சிஎஸ்கே அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டிக்கெட் விற்பனைக்கு கூடிய கூட்டத்தை பார்த்திருந்தாலே தெரிந்திருக்கும்.
இந்நிலையில், ஐபிஎல் 2019 தொடர்பாக ரோர் ஆஃப் லையன் என்ற டாக்குமெண்டரியை ஹாட்ஸ் ஸ்டார் வெளியிட்டுள்ளது. அதில், ஐபிஎல் தொடரில் தனக்கு நேர்ந்த அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார். குறிப்பாக, சூதாட்ட புகார் குறித்து உணர்வுபூர்வமாக பேசியுள்ளார். சூதாட்ட புகார் குறித்து டோனி பேசியது:-
வருத்தமாக...
“என்னுடைய வாழ்க்கையில் 2013ம் ஆண்டு மிகவும் கடினமானது. அதுவரை அப்படி ஒரு மன அழுத்தத்தை நான் அனுபவித்ததில்லை. 2007 உலகக்கோப்பையில் நம்முடைய அணி லீக் போட்டியிலேயே வெளியேறியது. அப்பொழுதும் எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனால், நாங்கள் நன்றாக விளையாடவில்லை என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். ஆனால், 2013ம் ஆண்டு சர்ச்சை மிகவும் வித்தியாசமானது. அப்போது, மக்கள் கிரிக்கெட் சூதாட்டத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அதுதான் நாட்டில் பெரிய பேச்சாக இருந்தது.
சூதாட்டத்திற்கு...
முதலில் குருநாத்தின் பெயர் அடிபட்டது. அவர் எங்கள் அணியைச் சேர்ந்தவர். அவர் அணியின் உரிமையாளரா?, தலைவரா?, ஆலோசகரா? உண்மையில் அவர் யார்? ஆனால், அவரை சீனிவாசனின் மருமகனாகத்தான் எங்களுக்கு தெரியும். என்னுடைய பெயரும் சூதாட்ட புகாரில் வெளியானது. எங்கள் அணி சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தால், நானும் ஈடுபட்டிருப்பேன் என ஊடகங்களில் பேசப்பட்டது. கிரிக்கெட்டில் சூதாட்டம் சாத்தியமா?. ஆம் சாத்தியம் தான். ஒரு வீரர் சூதாட்டத்தில் ஈடுபடலாம், நடுவர், பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர் எனத் தனிப்பட்ட முறையில் யாராவது ஈடுபடலாம். ஆனால், சூதாட்டத்திற்கு அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் தேவைப்படுவார்கள்.
சாதனைகளால்தான்...
நீங்கள் எப்படி இப்படி செய்தீர்கள் என்று என்னிடம் யாரும் கேட்கவில்லை. எனக்கும் இதுகுறித்து மற்றவர்களிடம் பேச பிடிக்கவில்லை. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை பாதிக்கும் எதனையும் நான் விரும்பவில்லை. என்னைப் பொருத்தமட்டில் கிரிக்கெட்தான் மிகவும் முக்கியமான ஒன்று. கிரிக்கெட்டில் செய்த சாதனைகளால்தான் நான் தற்போது இந்த நிலையில் இருக்கிறேன். மிகப்பெரிய குற்றம் என்பது கொலை கூட இல்லை. உண்மையில் அது சூதாட்டம்தான். அப்படி நான் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தால், மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். போட்டியின் முடிவுகள் மிகவும் எதிர்ப்பாராத அளவில் வித்தியாசமாக இருந்தால், சூதாட்டம் நடைபெற்றுள்ளதாக மக்கள் நினைக்கிறார்கள். கிரிக்கெட் மீதான நம்பிக்கையையும் அவர்கள் இழக்கிறார்கள். இதனைவிட கடினமான விஷயம் வேறு எதுவும் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
கலவையான வருத்தம்...
சூதாட்ட புகாரில் தடை விதிக்கப்பட்ட போது எனக்கு கலவையான வருத்தம் இருந்தது. ஏனெனில், ஒரு கேப்டனாக அணியில் எந்தத் தவறு நடந்தது என்பதை கேட்க முடிந்தது. எங்கள் தரப்பில் தவறு நடந்தது உண்மைதான். ஆனால், வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டார்களா? நாங்கள் என்ன தவறு செய்தோம்? என எல்லா கேள்விகளும் கேட்டுக் கொண்டோம். யாராலும் விளக்க முடியவில்லை” இவ்வாறு கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 12 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 13 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 18-03-2024.
18 Mar 2024 -
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
18 Mar 2024புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என்.
-
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
18 Mar 2024பெஷாவர் : வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று காலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது
18 Mar 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
18 Mar 2024ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு: அமலாக்க துறையின் சம்மனை புறக்கணித்தார் கெஜ்ரிவால்
18 Mar 2024புதுடெல்லி : டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முதல்வர் கெஜ்ர
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
18 Mar 2024புதுடெல்லி : தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசின் முதல் 100 நாட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
டிராக்டருடன் கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
18 Mar 2024பாட்னா : பீகாரில் டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க.