முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி வரும் 15-ம் தேதி அறிவிப்பு

திங்கட்கிழமை, 8 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி, வரும் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.

மே 30-ம் தேதி...

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, மே மாதம் 30 ஆம் தேதி, இங்கிலாந்தில் தொடங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இதற்கான அணியினரை முடிவு செய்யும் வகையில் உள்நாட்டுப் போட்டியை ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் நடத்தி வருகிறது. அதை வைத்து வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். நியூசிலாந்து, உலகக் கோப்பைக்கான அணியை ஏற்கனவே அறிவித்துவிட்டது. மற்ற நாடுகள் இன்னும் அறிவிக்கவில்லை. இதற்கிடையே, இந்திய அணி, வரும் 15 ஆம் தேதி, அறிவிக்கப்பட இருக்கிறது. மும்பையில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் கூட்டத்துக்குப் பின் இந்த அறிவிப்பு வெளியாகும்.

4வது வீரருக்கு...

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார், யார் சேர்க்கப்படுவார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், 4 வது வீரராக யாரை தேர்வு செய்வது என்பதில் சரியான முடிவெடுக்க முடியவில்லை. அந்த இடத்துக்கு ராயுடு உட்பட பலரை மாற்றிப் பார்த்தும் சரியான வீரர்கள் அமையவில்லை. 

ராகுலுக்கு வாய்ப்பு...

விராத் கோலி, ரோகித் சர்மா, தவான், தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, சாஹல்/ குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி ஆகியோர் இடம்பெறுவது உறுதியாகிவிட்ட நிலையில் மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக ரிஷாப் பன்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவரை சேர்க்க போட்டி நிலவுகிறது. மற் றொரு தொடக்க ஆட்டக்காரராக சேர்க்கப்பட கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு இருக்கிறது. இதுதவிர, கலீல் அகமது, குணால் பாண்ட்யா உட்பட சிலருக்கு வாய்ப்பு கிடைக் கலாம் எனக் கூறப்படுகிறது. உலகக் கோப்பையில், இந்திய அணி தனது முதல் போட்டியில், தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. ஜூன் 6 ஆம் தேதி இந்தப் போட்டி நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து