முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேனகா காந்தி தேர்தல் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

Source: provided

 புதுடெல்லி : சுல்தான்பூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மத்திய மந்திரி மேனகா காந்தி தேர்தல் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதித்து தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.   

தேர்தலுக்கு பின்னர் திட்டங்கள் கிடைக்கவேண்டும் என்றால் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரசாரத்தின் போது மேனகா காந்தி கூறியதாக புகார் கூறப்பட்டது. அதன் பேரில் அவருக்கு தேர்தல் கமிஷன் தடைவிதித்து இருக்கிறது.

ராம்பூர் தொகுதி சமாஜ்வாடி வேட்பாளர் அசம்கான் தன்னை எதிர்த்து பா.ஜனதா சார்பில் போட்டியிடும் ஜெயப்பிரதாவின் பெயரை குறிப்பிடாமல், அவரது உள்ளாடை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது. இதனால் அவர் பிரசாரம் செய்ய 72 மணி நேரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, தான் பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்து இருப்பதற்கு மாயாவதி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். “இந்தியா ஜனநாயக நாடு என்றும், இதுபோன்று தடை விதிப்பது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயல் என்றும்” அவர் கூறி இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து